
கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். காசியில் வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ.... கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் பெறுவோமோ அதே புண்ணிய பலன்களைத் தருகிற ஒப்பற்ற திருத்தலம் இது!
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காளஹஸ்தியில் உள்ளது போலவே, இங்கும் உத்ஸவருக்கு மூன்று அம்பிகை மூர்த்தங்கள் உண்டு. மேலும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரும் இங்கே தனிச் சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. ராகு பகவானும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதேபோன்று, பதினெட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீதுர்கை இங்கே விசேஷம். வேறொரு சந்நிதியில் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
ராகு முதலான தோஷங்கள், திருமணத்தடை முதலான இடர்பாடு களால் வருந்துவோர், இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கித் தொழுதால், விரைவில் நல்லது நடக்கும்; வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! மாணவர்கள் இங்கு வந்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீஞானாம்பிகைக்கு விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ஞானச் செல்வம் பெறலாம்; கல்வியில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்!
ஞானாம்பிகையை வணங்கி, ஞானம் பெறுவோம்!
- இ.ராஜவிபீஷிகா
படங்கள்: ந.வசந்தகுமார்