<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருச்சி- லால்குடிக்கு அருகில் உள்ளது மணக்கால். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.</p>.<p>பொதுவாக, ஆலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>அழகிய திருக்குளம் கோயிலுக்கு எதிரில் இருக்க, ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீநங்கையார் கோயில். ஸ்ரீகௌமாரி அம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். கோயிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.</p>.<p>சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இது. இங்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p style="text-align: left">பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்த கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம். கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும்; குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!</p>.<p>தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்க்கு விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.</p>.<p>நவராத்திரித் திருவிழாவும் ஆடித் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பத்து நாள் விழாவாக நடைபெறும் நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு வெகு பிரசித்தம்.</p>.<p>அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங் களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்பர்.</p>.<p>மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்க, வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்னைகள் நீங்க, திருமண யோகம் பெற, குழந்தை பாக்கியம் பெற ஸ்ரீசப்தமாதர்களை வணங்கி வளம் பெறுவோம்.</p>.<p style="text-align: right"><strong>- த.பிரியங்கா </strong></p>.<p style="text-align: right"><strong>படங்கள்: தே.தீட்ஷித்</strong></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருச்சி- லால்குடிக்கு அருகில் உள்ளது மணக்கால். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.</p>.<p>பொதுவாக, ஆலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>அழகிய திருக்குளம் கோயிலுக்கு எதிரில் இருக்க, ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீநங்கையார் கோயில். ஸ்ரீகௌமாரி அம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். கோயிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.</p>.<p>சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இது. இங்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p style="text-align: left">பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்த கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம். கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும்; குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!</p>.<p>தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்க்கு விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.</p>.<p>நவராத்திரித் திருவிழாவும் ஆடித் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பத்து நாள் விழாவாக நடைபெறும் நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு வெகு பிரசித்தம்.</p>.<p>அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங் களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்பர்.</p>.<p>மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்க, வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்னைகள் நீங்க, திருமண யோகம் பெற, குழந்தை பாக்கியம் பெற ஸ்ரீசப்தமாதர்களை வணங்கி வளம் பெறுவோம்.</p>.<p style="text-align: right"><strong>- த.பிரியங்கா </strong></p>.<p style="text-align: right"><strong>படங்கள்: தே.தீட்ஷித்</strong></p>