<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ம</strong></span>துரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வைகையாற்றின் தென்கரைப் பகுதியில் திருப்புவனத்துக்கு அருகில் உள்ள சிலைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது கொந்தகை. இங்கே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்.</p>.<p>குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்று ஒருகாலத் தில் அழைக்கப்பட்ட இந்த ஊர், இப்போது கொந்தகை என அழைக்கப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்த மன்னன், தன் மகள் சித்ராங்கதையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்து வைத்தான். மேலும், அவர்கள் வாழ்வதற்கு ஒரு கிராமத்தையே நிர்மாணித்துக் கொடுத்தான். அந்த ஊருக்கு, அர்ஜுனனின் தாயார் குந்திதேவியின் பெயரையே சூட்டினான் என்கிறது ஸ்தல புராணம்.</p>.<p>அதையடுத்து, அங்கே ஒரு கோயிலைக் கட்டி, அந்தணர்களைக் குடியமர்த்தி, நித்திய வழிபாட்டுக்கும் வழிவகைகள் செய்தான் மன்னன். தவிர, திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த ஊருக்கும் உண்டு.</p>.<p>வருடம் முழுவதும் பெரிதாய் இங்கு கூட்டம் வருவதில்லை என்றாலும், புரட்டாசி வந்துவிட்டால், அந்த மாதம் முழுவதும் எங்கிருந்தெல்லாமோ வந்து, தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக, புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலையில்... ஸ்ரீதெய்வநாயகப் பெருமாளின் உத்ஸவ மூர்த்தி திருவீதியுலா வருவதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, வரம் பெற்றுச் செல்கின்றனர்.</p>.<p>''புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்து பெருமாளைத் தரிசிப்பதும் சிறப்பு. அந்த நாளில் வந்து வணங்கினால், இல்லறத்தில் இனிமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் வழங்கி அருள்வார் பெருமாள். மூன்றாவது சனிக்கிழமையில், மழை வேண்டி வேத பாராயணம் முழங்க, பெருமாளுக்குத் திருமஞ்சனம் சார்த்தி வழிபடுவதும் வழக்கம்'' என்கிறார் கோயிலின் கோபாலகிருஷ்ண பட்டர்.</p>.<p>நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு! உபயநாச்சிமார்களுடன் உத்ஸவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார்.</p>.<p>பித்ரு தோஷம், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம், திருமணத் தடை, பிள்ளைச் செல்வம் இல்லாத சோகம்... எனத் தவிப்பவர்கள், இங்கு வந்து புரட்டாசி விரதம் மேற்கொண்டு, ஸ்ரீதெய்வநாயகப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து தரிசித்தால், விரைவில் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்; சாபம் நீங்கி சந்தோஷம் பெருகும்; கல்யாண மாலை தோள் சேரும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff6600"><strong> - லோ.இந்து</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff6600"><strong>படங்கள்: பா.காளிமுத்து</strong></span></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>ம</strong></span>துரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வைகையாற்றின் தென்கரைப் பகுதியில் திருப்புவனத்துக்கு அருகில் உள்ள சிலைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது கொந்தகை. இங்கே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்.</p>.<p>குந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்று ஒருகாலத் தில் அழைக்கப்பட்ட இந்த ஊர், இப்போது கொந்தகை என அழைக்கப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்த மன்னன், தன் மகள் சித்ராங்கதையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்து வைத்தான். மேலும், அவர்கள் வாழ்வதற்கு ஒரு கிராமத்தையே நிர்மாணித்துக் கொடுத்தான். அந்த ஊருக்கு, அர்ஜுனனின் தாயார் குந்திதேவியின் பெயரையே சூட்டினான் என்கிறது ஸ்தல புராணம்.</p>.<p>அதையடுத்து, அங்கே ஒரு கோயிலைக் கட்டி, அந்தணர்களைக் குடியமர்த்தி, நித்திய வழிபாட்டுக்கும் வழிவகைகள் செய்தான் மன்னன். தவிர, திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த ஊருக்கும் உண்டு.</p>.<p>வருடம் முழுவதும் பெரிதாய் இங்கு கூட்டம் வருவதில்லை என்றாலும், புரட்டாசி வந்துவிட்டால், அந்த மாதம் முழுவதும் எங்கிருந்தெல்லாமோ வந்து, தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக, புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலையில்... ஸ்ரீதெய்வநாயகப் பெருமாளின் உத்ஸவ மூர்த்தி திருவீதியுலா வருவதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, வரம் பெற்றுச் செல்கின்றனர்.</p>.<p>''புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்து பெருமாளைத் தரிசிப்பதும் சிறப்பு. அந்த நாளில் வந்து வணங்கினால், இல்லறத்தில் இனிமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் வழங்கி அருள்வார் பெருமாள். மூன்றாவது சனிக்கிழமையில், மழை வேண்டி வேத பாராயணம் முழங்க, பெருமாளுக்குத் திருமஞ்சனம் சார்த்தி வழிபடுவதும் வழக்கம்'' என்கிறார் கோயிலின் கோபாலகிருஷ்ண பட்டர்.</p>.<p>நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு! உபயநாச்சிமார்களுடன் உத்ஸவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார்.</p>.<p>பித்ரு தோஷம், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம், திருமணத் தடை, பிள்ளைச் செல்வம் இல்லாத சோகம்... எனத் தவிப்பவர்கள், இங்கு வந்து புரட்டாசி விரதம் மேற்கொண்டு, ஸ்ரீதெய்வநாயகப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து தரிசித்தால், விரைவில் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்; சாபம் நீங்கி சந்தோஷம் பெருகும்; கல்யாண மாலை தோள் சேரும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff6600"><strong> - லோ.இந்து</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff6600"><strong>படங்கள்: பா.காளிமுத்து</strong></span></p>