<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> பு</strong>.துக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீபிரகதாம்பாள் திருக்கோயில்தான்! சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தில், ஒவ்வொரு சந்நிதியிலும் அழகு ததும்பி நிற்கிற இறைத் திருமேனிகளைக் கண்குளிரத் தரிசிக்கலாம்..<p>இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகோகர்ணேஸ்வரர். இவரைத் தரிசிப்பதற்கு முன்னதாக கங்காதீஸ்வரரையும் தரிசிக்கலாம். 'இந்தக் கோயிலுக்கு வந்து, சாமி கும்பிட்டுப் போனா, நம்ம குடும்பமே செழிக்கும்; நாம நினைச்சதெல்லாம் நடக்கும்’ எனச் சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வழக்கம்.</p>.<p>ஆனால், இங்கே... ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு அருகில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. முழுமுதற் கடவுளும் ஆனைமுகனுமான ஸ்ரீவிநாயகருடன், ஞானகாரகனாக ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதால், செட்டிநாடு எனப்படும் காரைக்குடி, திருச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர் எனப் பல ஊர்களில் இருந்தெல்லாம் வியாழக்கிழமைகளில் வந்து வணங்கிச் செல்கின்றனர்! </p>.<p>குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூவால் மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருளைக் கிடைக்கப் பெற்று, கல்வி- கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வருவார்கள் என்கின்றனர் பக்தர்கள்!</p>.<p>புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த தலமும் இதுவே! எனவேபுதுக் கோட்டைக்கு வந்து, ஸ்ரீவிநாயகருடன் காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறுங்கள்!</p>.<p style="text-align: right"><strong>- இ.லோகேஸ்வரி<br /> படங்கள்: பா.காளிமுத்து</strong></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> பு</strong>.துக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீபிரகதாம்பாள் திருக்கோயில்தான்! சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தில், ஒவ்வொரு சந்நிதியிலும் அழகு ததும்பி நிற்கிற இறைத் திருமேனிகளைக் கண்குளிரத் தரிசிக்கலாம்..<p>இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகோகர்ணேஸ்வரர். இவரைத் தரிசிப்பதற்கு முன்னதாக கங்காதீஸ்வரரையும் தரிசிக்கலாம். 'இந்தக் கோயிலுக்கு வந்து, சாமி கும்பிட்டுப் போனா, நம்ம குடும்பமே செழிக்கும்; நாம நினைச்சதெல்லாம் நடக்கும்’ எனச் சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.</p>.<p>புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வழக்கம்.</p>.<p>ஆனால், இங்கே... ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு அருகில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. முழுமுதற் கடவுளும் ஆனைமுகனுமான ஸ்ரீவிநாயகருடன், ஞானகாரகனாக ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதால், செட்டிநாடு எனப்படும் காரைக்குடி, திருச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர் எனப் பல ஊர்களில் இருந்தெல்லாம் வியாழக்கிழமைகளில் வந்து வணங்கிச் செல்கின்றனர்! </p>.<p>குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூவால் மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருளைக் கிடைக்கப் பெற்று, கல்வி- கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வருவார்கள் என்கின்றனர் பக்தர்கள்!</p>.<p>புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த தலமும் இதுவே! எனவேபுதுக் கோட்டைக்கு வந்து, ஸ்ரீவிநாயகருடன் காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறுங்கள்!</p>.<p style="text-align: right"><strong>- இ.லோகேஸ்வரி<br /> படங்கள்: பா.காளிமுத்து</strong></p>