<p><strong><span style="font-size: medium">பெ</span></strong>ங்களூரில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவிலும், மைசூரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது தொண்டனூர் திருத்தலம்.</p>.<p>சைவத்தில் திளைத்த சோழ மன்னன், வைணவத்தை ஆராதித்த ஸ்ரீராமானுஜரைப் பழிவாங்கத் துடித்ததும், ஸ்ரீராமானுஜரின் ஆடைகளை அணிந்துகொண்டு, அவருக்குப் பதிலாகக் கூரத்தாழ்வான் சென்றதும், அப்போது ஸ்ரீராமானுஜரைத் தப்பிச் செல்லச் செய்ததும் நாம் அறிந்ததுதான், இல்லையா? </p>.<p>ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்ரீராமானுஜர் அடைக்கலமானது, கர்நாடக மாநிலம் தொண்டனூர் திருத்தலத்தில்! அங்கே, அவரின் சீடர்களில் ஒருவரான தொண்டனூர் நம்பி, ராமானுஜரை வரவேற்று உபசரித்தார். </p>.<p>அப்போது, பிட்டிதேவன் என்பவன் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். சமணத்தின்மீது பற்றுக் கொண் டிருந்தவன் அவன். ஒருமுறை, தொண்டனூர் நம்பி, பிட்டிதேவனின் சபைக்குச் சென்றபோது, இருளில் மூழ்கிக் கிடந்தது அரண்மனை. எங்கும் இருள்; எங்கும் சோகம்! அதிர்ச்சியும் குழப்பமுமாக உள்ளே நுழைந்த தொண்டனூர் நம்பியிடம், ''என் மகளை பிரம்மராட்சஸ் பிடித்து அலைக்கழிக்கிறது. இதிலிருந்து என் மகள் மீள்வதற்கு, எங்களின் சமண மத குருவும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டார். ஆனால், பலன் ஏதுமில்லை'' எனச் சொல்லி வருந்தினான் மன்னன்.</p>.<p>இதைக்கேட்ட தொண்டனூர் நம்பி, ''மன்னா, கவலை வேண்டாம்! உன் அதிர்ஷ்டம், எங்களின் குருநாதர் ஸ்ரீராமானுஜர், இங்கே வருகை தந்துள்ளார். அவரை அழைத்து வருகிறேன். பிரம்மராட்சஸை அவர் விரட்டிவிடுவார், பாருங்கள்'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. உடனே மன்னன், ''நீங்கள் சொல்வது போல உங்களின் குருநாதர், பிரம்மராட்சஸப் பேயை விரட்டிவிட்டால், சமண மதத்தில் இருந்து விலகி, ஸ்ரீராமானுஜரை குருவாக ஏற்று, வைணவத்தைப் போற்றத் துவங்கிவிடுவேன்'' என நெகிழ்ந்தான்..<p>அதன்படி, அரண்மனைக்கு வந்தார் ஸ்ரீராமானுஜர். அனைவரும் அவரை வரவேற்றனர். பித்துப் பிடித்தவள் போல் இருந்த மன்னனின் மகளைப் பார்த்தார். தன் கமண்டலத்தில் இருந்து</p>.<p>கொஞ்சம் தண்ணீரை எடுத்து, அவள் மீது தெளித்தார். அவள் உடனே மயங்கி விழுந்தாள். பிறகு எழுந்தபோது, அவள் தெளிந்திருந்தாள். இதைக் கண்டு சிலிர்த்த மன்னனும் மகாராணியும் ஸ்ரீராமானுஜரை விழுந்து நமஸ்கரித்தனர். அவருக்குச் சீடர்களானார்கள். பிட்டிதேவன் எனும் மன்னனின் பெயரை, விஷ்ணுவர்தன் என மாற்றியருளினார் ஸ்ரீராமானுஜர். மன்னனைத் தொடர்ந்து, எண்ணற்ற மக்களும் வைணவத்துக்கு மாறினர்.</p>.<p>இதையடுத்து, அங்கிருந்தபடியே விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்ரீராமானுஜர். பிறகு அவரது உத்தரவுப்படி, வைணவக் கோயில்கள் பலவற்றை உருவாக்கினான் விஷ்ணுவர்தன். பேளூர் சென்னகேசவர் ஆலயம், தொண்டனூர் ஸ்ரீநம்பி நாராயணர் கோயில், தலைக்காட் ஸ்ரீகீர்த்தி நாராயணர் கோயில், கொடகு ஸ்ரீவீர நாரா யணர் கோயில், மேலுகோட் ஸ்ரீசெலுவ நாராயணர் கோயில் எனப் பல கோயில்களை கலைநயத்துடன் உருவாக்கினான்.</p>.<p>இந்த நிலையில், ஸ்ரீராமானுஜர் ஏதோ வசியம் செய்து, மன்னரின் மகளைப் பேயிலிருந்து மீட்டுள்ளார் எனப் பழி சுமத்தினர் சமண ஆச்சார்யர்கள். ''எங்களுடன் வாதாடி வெல்லத் தயாரா?'' என்று உடையவரை அழைத்தனர். உடையவரும் சவாலை ஏற்றார். அதன்படி 12,000 சமணர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுக்கும் தனக்கும் இடையே திரைச்சீலையைக் கட்டும்படி பணித்தார். திரையும் கட்டப்பட்டது. திரைக்குப் பின்னால், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக உருவெடுத்த உடையவர், வாதத்தில் 12,000 சமணர்களையும் வென்றார்.</p>.<p>ஸ்ரீராமானுஜர் எழுப்பிய தொண்ட னூர் ஸ்ரீநம்பி நாராயணர் கோயிலில், சுமார் 18 அடி உயரத்தில், வலது கரத்தில் சங்கு- இடது கரத்தில் சக்கரம் என மாறி, ஏந்தியுள்ளார் மூலவர். ஹொய்சாளர் காலத்து கட்டுமானப் பாணியில், பேளூர், ஹளபேடு கோயில்கள் போலவே, இங்கும் அழகிய தூண்கள் காட்சி தருகின்றன. அருகில் உள்ள சிறு குன்று ஒன்றில் ஸ்ரீநரசிம்மர் கோயிலும், எதிரில் ஸ்ரீகோபாலகிருஷ்ணர் ஆலயமும் அமைந்துள்ளன.</p>.<p>ஸ்ரீநரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் உருவெடுத்த ஸ்ரீராமானுஜரின் திரு விக்கிரகம் காட்சி தருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் அமைத்தாராம், உடையவர். இன்றுவரை வற்றாத ஏரியாகத் திகழ்வதாகப் போற்றுகின்றனர், பக்தர்கள்.</p>.<p>இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்ப நுட்பங்கள் கொண்ட ஆலயத்தை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!</p>.<p style="text-align: right"><strong>படங்கள்: கே.கார்த்திகேயன் </strong></p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="95%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #ff0000"><strong><span style="font-size: medium">நினைத்தது நிறைவேறும்! </span></strong></span></p> <p><strong><span style="font-size: medium"></span></strong></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="95%"><tbody><tr><td><p><strong><span style="font-size: medium">''மூ</span></strong>லவர், ஸ்ரீநம்பி நாராயணப் பெருமாள். தாயார்- ஸ்ரீஅரவிந்த நாயகி. இங்கே, பெருமாளுக்கு வலப்பக்கமாகக் காட்சி தருகிறாள் தாயார். ஸ்ரீதேவி- பூதேவியுடன் உத்ஸவர் அழகுறக் காட்சி தருகிறார். இங்கேயுள்ள ஏரியில் நீராடி, இறைவனைத் தரிசித்தால், முக்தி கிடைப்பது நிச்சயம்'' என்கிறார் கோயிலின் அர்ச்சகர் சேஷாத்திரி.</p> <p>''ஒருகாலத்தில், மன்னர்களின் கொடுமையால், தங்கள் வீட்டு நகைகளைக் கொண்டு வந்து ஏரியில் போட்டுவிட்டார்களாம், மக்கள். அப்படிப் போடப்பட்ட முத்து, பவளம், வைரம், வைடூரியம், தங்கம் ஆகியவற்றை இந்த ஏரியின் மீன்கள் விழுங்கியிருக்கலாம் என்றும், எனவே இங்கு எவரும் மீன் பிடிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <p>சித்திரை மற்றும் வைகாசியில் இங்கே திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை கோயில் நடைதிறந்திருக்கும். தொண்டனூர் ஸ்ரீநம்பி நாராயணரை நம்பித் தொழுதால், நினைத்தது நிறைவேறும் என்பது உறுதி!'' எனச் சிலிர்ப்புடன் தெரிவித்தார் அர்ச்சகர் சேஷாத்திரி.</p> </td> </tr> </tbody> </table>
<p><strong><span style="font-size: medium">பெ</span></strong>ங்களூரில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவிலும், மைசூரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது தொண்டனூர் திருத்தலம்.</p>.<p>சைவத்தில் திளைத்த சோழ மன்னன், வைணவத்தை ஆராதித்த ஸ்ரீராமானுஜரைப் பழிவாங்கத் துடித்ததும், ஸ்ரீராமானுஜரின் ஆடைகளை அணிந்துகொண்டு, அவருக்குப் பதிலாகக் கூரத்தாழ்வான் சென்றதும், அப்போது ஸ்ரீராமானுஜரைத் தப்பிச் செல்லச் செய்ததும் நாம் அறிந்ததுதான், இல்லையா? </p>.<p>ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஸ்ரீராமானுஜர் அடைக்கலமானது, கர்நாடக மாநிலம் தொண்டனூர் திருத்தலத்தில்! அங்கே, அவரின் சீடர்களில் ஒருவரான தொண்டனூர் நம்பி, ராமானுஜரை வரவேற்று உபசரித்தார். </p>.<p>அப்போது, பிட்டிதேவன் என்பவன் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். சமணத்தின்மீது பற்றுக் கொண் டிருந்தவன் அவன். ஒருமுறை, தொண்டனூர் நம்பி, பிட்டிதேவனின் சபைக்குச் சென்றபோது, இருளில் மூழ்கிக் கிடந்தது அரண்மனை. எங்கும் இருள்; எங்கும் சோகம்! அதிர்ச்சியும் குழப்பமுமாக உள்ளே நுழைந்த தொண்டனூர் நம்பியிடம், ''என் மகளை பிரம்மராட்சஸ் பிடித்து அலைக்கழிக்கிறது. இதிலிருந்து என் மகள் மீள்வதற்கு, எங்களின் சமண மத குருவும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டார். ஆனால், பலன் ஏதுமில்லை'' எனச் சொல்லி வருந்தினான் மன்னன்.</p>.<p>இதைக்கேட்ட தொண்டனூர் நம்பி, ''மன்னா, கவலை வேண்டாம்! உன் அதிர்ஷ்டம், எங்களின் குருநாதர் ஸ்ரீராமானுஜர், இங்கே வருகை தந்துள்ளார். அவரை அழைத்து வருகிறேன். பிரம்மராட்சஸை அவர் விரட்டிவிடுவார், பாருங்கள்'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. உடனே மன்னன், ''நீங்கள் சொல்வது போல உங்களின் குருநாதர், பிரம்மராட்சஸப் பேயை விரட்டிவிட்டால், சமண மதத்தில் இருந்து விலகி, ஸ்ரீராமானுஜரை குருவாக ஏற்று, வைணவத்தைப் போற்றத் துவங்கிவிடுவேன்'' என நெகிழ்ந்தான்..<p>அதன்படி, அரண்மனைக்கு வந்தார் ஸ்ரீராமானுஜர். அனைவரும் அவரை வரவேற்றனர். பித்துப் பிடித்தவள் போல் இருந்த மன்னனின் மகளைப் பார்த்தார். தன் கமண்டலத்தில் இருந்து</p>.<p>கொஞ்சம் தண்ணீரை எடுத்து, அவள் மீது தெளித்தார். அவள் உடனே மயங்கி விழுந்தாள். பிறகு எழுந்தபோது, அவள் தெளிந்திருந்தாள். இதைக் கண்டு சிலிர்த்த மன்னனும் மகாராணியும் ஸ்ரீராமானுஜரை விழுந்து நமஸ்கரித்தனர். அவருக்குச் சீடர்களானார்கள். பிட்டிதேவன் எனும் மன்னனின் பெயரை, விஷ்ணுவர்தன் என மாற்றியருளினார் ஸ்ரீராமானுஜர். மன்னனைத் தொடர்ந்து, எண்ணற்ற மக்களும் வைணவத்துக்கு மாறினர்.</p>.<p>இதையடுத்து, அங்கிருந்தபடியே விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்ரீராமானுஜர். பிறகு அவரது உத்தரவுப்படி, வைணவக் கோயில்கள் பலவற்றை உருவாக்கினான் விஷ்ணுவர்தன். பேளூர் சென்னகேசவர் ஆலயம், தொண்டனூர் ஸ்ரீநம்பி நாராயணர் கோயில், தலைக்காட் ஸ்ரீகீர்த்தி நாராயணர் கோயில், கொடகு ஸ்ரீவீர நாரா யணர் கோயில், மேலுகோட் ஸ்ரீசெலுவ நாராயணர் கோயில் எனப் பல கோயில்களை கலைநயத்துடன் உருவாக்கினான்.</p>.<p>இந்த நிலையில், ஸ்ரீராமானுஜர் ஏதோ வசியம் செய்து, மன்னரின் மகளைப் பேயிலிருந்து மீட்டுள்ளார் எனப் பழி சுமத்தினர் சமண ஆச்சார்யர்கள். ''எங்களுடன் வாதாடி வெல்லத் தயாரா?'' என்று உடையவரை அழைத்தனர். உடையவரும் சவாலை ஏற்றார். அதன்படி 12,000 சமணர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுக்கும் தனக்கும் இடையே திரைச்சீலையைக் கட்டும்படி பணித்தார். திரையும் கட்டப்பட்டது. திரைக்குப் பின்னால், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக உருவெடுத்த உடையவர், வாதத்தில் 12,000 சமணர்களையும் வென்றார்.</p>.<p>ஸ்ரீராமானுஜர் எழுப்பிய தொண்ட னூர் ஸ்ரீநம்பி நாராயணர் கோயிலில், சுமார் 18 அடி உயரத்தில், வலது கரத்தில் சங்கு- இடது கரத்தில் சக்கரம் என மாறி, ஏந்தியுள்ளார் மூலவர். ஹொய்சாளர் காலத்து கட்டுமானப் பாணியில், பேளூர், ஹளபேடு கோயில்கள் போலவே, இங்கும் அழகிய தூண்கள் காட்சி தருகின்றன. அருகில் உள்ள சிறு குன்று ஒன்றில் ஸ்ரீநரசிம்மர் கோயிலும், எதிரில் ஸ்ரீகோபாலகிருஷ்ணர் ஆலயமும் அமைந்துள்ளன.</p>.<p>ஸ்ரீநரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் உருவெடுத்த ஸ்ரீராமானுஜரின் திரு விக்கிரகம் காட்சி தருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் அமைத்தாராம், உடையவர். இன்றுவரை வற்றாத ஏரியாகத் திகழ்வதாகப் போற்றுகின்றனர், பக்தர்கள்.</p>.<p>இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்ப நுட்பங்கள் கொண்ட ஆலயத்தை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!</p>.<p style="text-align: right"><strong>படங்கள்: கே.கார்த்திகேயன் </strong></p>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="95%"> <tbody> <tr> <td> <p style="text-align: center"><span style="color: #ff0000"><strong><span style="font-size: medium">நினைத்தது நிறைவேறும்! </span></strong></span></p> <p><strong><span style="font-size: medium"></span></strong></p></td></tr></tbody></table>.<table align="center" border="3" cellpadding="5" cellspacing="5" width="95%"><tbody><tr><td><p><strong><span style="font-size: medium">''மூ</span></strong>லவர், ஸ்ரீநம்பி நாராயணப் பெருமாள். தாயார்- ஸ்ரீஅரவிந்த நாயகி. இங்கே, பெருமாளுக்கு வலப்பக்கமாகக் காட்சி தருகிறாள் தாயார். ஸ்ரீதேவி- பூதேவியுடன் உத்ஸவர் அழகுறக் காட்சி தருகிறார். இங்கேயுள்ள ஏரியில் நீராடி, இறைவனைத் தரிசித்தால், முக்தி கிடைப்பது நிச்சயம்'' என்கிறார் கோயிலின் அர்ச்சகர் சேஷாத்திரி.</p> <p>''ஒருகாலத்தில், மன்னர்களின் கொடுமையால், தங்கள் வீட்டு நகைகளைக் கொண்டு வந்து ஏரியில் போட்டுவிட்டார்களாம், மக்கள். அப்படிப் போடப்பட்ட முத்து, பவளம், வைரம், வைடூரியம், தங்கம் ஆகியவற்றை இந்த ஏரியின் மீன்கள் விழுங்கியிருக்கலாம் என்றும், எனவே இங்கு எவரும் மீன் பிடிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <p>சித்திரை மற்றும் வைகாசியில் இங்கே திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை கோயில் நடைதிறந்திருக்கும். தொண்டனூர் ஸ்ரீநம்பி நாராயணரை நம்பித் தொழுதால், நினைத்தது நிறைவேறும் என்பது உறுதி!'' எனச் சிலிர்ப்புடன் தெரிவித்தார் அர்ச்சகர் சேஷாத்திரி.</p> </td> </tr> </tbody> </table>