<div class="article_container"> <b><br /></b><table><tbody><tr> <td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr> <td align="right" class="Brown_color" height="25" valign="middle">ஸ்தல வழிபாடு</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p><span class="style4">'பொ</span>ன் கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது' என்பார்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் அதிபதியான குபேரனை, அவருக்குரிய புதன்கிழமை அன்றோ, மற்ற விசேஷ நாளிலோ வணங்கி வழிபட்டால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்! </p> <p>உலகின் பணக்காரக் கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்து உதவியவர் குபேரன். இந்தக் கடனை அடைப்பதற்காக, இன்றளவும் பெருமாள் படியளந்துகொண்டிருக்கிறார் என்கிறது புராணம். 'குபேரன்' என்கிற திருநாமத்தை உச்சரித்தாலே, நமக்குச் செல்வங்கள் சேரும் என்பது முன்னோர் வாக்கு. </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தம பாளையம் என்னும் ஊரில் உள்ளது. புராதனமான இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், ராகு-கேது கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், சனி- ஞாயிறுகளில், மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை கிரக நிவர்த்தி பூஜைகளும் இங்கே நடைபெறுகின்றன. </p> <p>தோஷம் நீங்கினால், தொடர்வது சந்தோஷமான வாழ்க்கைதானே?! ஆகவே, வாழ்வதற்கான பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுக்கும் குபேரனும், இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்! குபேரனுடன் ஸ்ரீலட்சுமி தேவியும் காட்சி தந்தருள்கிறார். </p> <p>புதன்கிழமைதோறும் (வெள்ளிக்கிழமை யிலும்கூட) குபேரனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் செல்வ கடாட்சம் சேரும்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். அட்சய திருதியை நாளில், குபேரனின் திருவடியில், பொன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வணங்கினால், ஆயுள் முழுவதும் காசுக்குப் பஞ்சமின்றி, சந்தோஷத்துடன் வாழலாம் என்கின்றனர் தேனி மாவட்டத்து மக்கள். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>இங்கே, ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளத்தி நாதர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, வாஸ்து பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. </p> <p>இதோ... வரக்கூடிய தீபாவளித் திருநாள், வெள்ளிக்கிழமை அன்று (நவம்பர் 5-ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஸ்ரீகுபேரனுக்கும் ஸ்ரீலட்சுமிதேவிக்கும் நெய் தீபமேற்றி, ஒரு ரூபாய் நாணயத்தைக் குபேரனின் திருவடியில் வைத்து, மனதார வழிபடுங்கள்; இயன்றவர்கள், குபேரனுக்கு வஸ்திரம் சார்த்தியும் வழிபடலாம்!</p> <p>'எவ்ளோ சம்பாதிச்சாலும், கையில எதுவும் தங்கவே மாட்டேங்குது; நாலு காசு சேர்க்க முடியலை; சின்னதா ஒரு வீடு வாங்க முடியலை' என்று அலுத்துக்கொள்ளும் அன்பர்கள், குபேர வழிபாடு செய்யுங்கள்; குபேர- லட்சுமியை வணங்குங்கள். உங்கள் மனக்குறை தீர்ந்து, செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்; லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வீர்கள்! </p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="Brown_color"><font color="#006666">- தி. முத்துராஜ், படங்கள் இரா. முத்துநாகு</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>
<div class="article_container"> <b><br /></b><table><tbody><tr> <td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr> <td align="right" class="Brown_color" height="25" valign="middle">ஸ்தல வழிபாடு</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p><span class="style4">'பொ</span>ன் கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது' என்பார்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் அதிபதியான குபேரனை, அவருக்குரிய புதன்கிழமை அன்றோ, மற்ற விசேஷ நாளிலோ வணங்கி வழிபட்டால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்! </p> <p>உலகின் பணக்காரக் கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்து உதவியவர் குபேரன். இந்தக் கடனை அடைப்பதற்காக, இன்றளவும் பெருமாள் படியளந்துகொண்டிருக்கிறார் என்கிறது புராணம். 'குபேரன்' என்கிற திருநாமத்தை உச்சரித்தாலே, நமக்குச் செல்வங்கள் சேரும் என்பது முன்னோர் வாக்கு. </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தம பாளையம் என்னும் ஊரில் உள்ளது. புராதனமான இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், ராகு-கேது கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், சனி- ஞாயிறுகளில், மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை கிரக நிவர்த்தி பூஜைகளும் இங்கே நடைபெறுகின்றன. </p> <p>தோஷம் நீங்கினால், தொடர்வது சந்தோஷமான வாழ்க்கைதானே?! ஆகவே, வாழ்வதற்கான பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுக்கும் குபேரனும், இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்! குபேரனுடன் ஸ்ரீலட்சுமி தேவியும் காட்சி தந்தருள்கிறார். </p> <p>புதன்கிழமைதோறும் (வெள்ளிக்கிழமை யிலும்கூட) குபேரனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் செல்வ கடாட்சம் சேரும்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். அட்சய திருதியை நாளில், குபேரனின் திருவடியில், பொன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வணங்கினால், ஆயுள் முழுவதும் காசுக்குப் பஞ்சமின்றி, சந்தோஷத்துடன் வாழலாம் என்கின்றனர் தேனி மாவட்டத்து மக்கள். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>இங்கே, ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளத்தி நாதர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, வாஸ்து பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. </p> <p>இதோ... வரக்கூடிய தீபாவளித் திருநாள், வெள்ளிக்கிழமை அன்று (நவம்பர் 5-ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஸ்ரீகுபேரனுக்கும் ஸ்ரீலட்சுமிதேவிக்கும் நெய் தீபமேற்றி, ஒரு ரூபாய் நாணயத்தைக் குபேரனின் திருவடியில் வைத்து, மனதார வழிபடுங்கள்; இயன்றவர்கள், குபேரனுக்கு வஸ்திரம் சார்த்தியும் வழிபடலாம்!</p> <p>'எவ்ளோ சம்பாதிச்சாலும், கையில எதுவும் தங்கவே மாட்டேங்குது; நாலு காசு சேர்க்க முடியலை; சின்னதா ஒரு வீடு வாங்க முடியலை' என்று அலுத்துக்கொள்ளும் அன்பர்கள், குபேர வழிபாடு செய்யுங்கள்; குபேர- லட்சுமியை வணங்குங்கள். உங்கள் மனக்குறை தீர்ந்து, செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்; லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வீர்கள்! </p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="Brown_color"><font color="#006666">- தி. முத்துராஜ், படங்கள் இரா. முத்துநாகு</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>