தொடர்கள்
Published:Updated:

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!


சிறப்பு கட்டுரை
கண்ணனைப் பணி மனமே...
துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!
துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!
துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

ர்நாடக மாநிலம், கொப்பா தாலுகாவில் உள்ளது ஸ்ரீக்ஷேத்திர சகடபுரம். சிருங்கேரியில் இருந்து 28 கி.மீ. தொலைவில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிகாஸ்ரமம்; இதையட்டி அழகுற அமைந்துள்ளது, ஸ்ரீசந்தான வேணுகோபாலகிருஷ்ணன் ஆலயம்!

ஸ்ரீஆதிசங்கரர், பாரததேசத்தில் ஆன்மிகச் சிந்தனையைப் பரப்பும் வகை யில், கிழக்கில் ஸ்ரீஹஸ்தமலகர் (ஸ்ரீஜகந்நாத கோவர்த்தன பீடம்), மேற்கில் ஸ்ரீபத்மபாதர் (துவாரகா காளிகா பீடம்), வடக்கில் ஸ்ரீதோடகாச்சார்யர் (ஸ்ரீபத்ரிகாஸ்ரம ஜ்யோதிஷ் பீடம்- பத்ரிநாத்), தெற்கில், ஸ்ரீசுரேஷ்வர் (ஸ்ரீசிருங் கேரி சாரதா பீடம்) என திசைக்கு ஒருவராக நான்கு திசைகளுக்கும் நான்கு சீடர்களை நியமித்தார்.

துவக்க காலத்தில், நால்வரும் ஸ்ரீஆதிசங்கரரிடம் வேதங்கள் பயின்று வந்தனர்.

இவர்களில் ஸ்ரீதோடகாச்சார்யர், குருவுக்குச் சேவை புரிவதையே தனது முக்கிய கடமையாகக் கருதி, செயலாற்றி வந்தார். ஒருமுறை, குருவின் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு, ஆற்றில் துவைப்பதற்காகச் சென்றார் தோடகாச்சார்யர். அப்போது மற்ற சீடர்கள் ஸ்ரீஆதிசங்கரரிடம், ''குருவே! பாடம் நடத்துங்கள்'' எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆதிசங்கரரோ, ''தோடகாச்சார்யர் வரட்டும். எல்லோருக்கும் சேர்த்துப் பாடம் நடத்துகிறேன்'' என்றார்.

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

அதேநேரம், துணி துவைத்து எடுத்து வரும் வழியிலேயே, எட்டு அற்புதமான பாடல்களை (தோட காஷ்டகம்) இயற்றிய தோடகாச்சார்யர், அவற்றை வகுப்பில் தெரிவிக்க, ஆதிசங்கரரும் சீடர்களும் பிரமித்தனர். குருபக்தியால் புலமையும் திறமையும் கைவரப் பெறலாம் என்பதை உலகுக்கு உணர்த்திய சம்பவம் இது!

ஆதிசங்கரர் முக்தி அடைந்த பிறகு (கி.பி.820-ல்), நான்கு பீடங்களையும் வழிவழியே வந்த பீடாதிபதிகள் நிர்வகித்தனர். பத்ரிகாஸ்ரம ஜ்யோதிஷ் பீடாதிபதியாக, 1330-ஆம் வருடம் பொறுப்பேற்றார் ஸ்ரீசத்யதீர்த்த மகாமுனி. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி யாத்திரை

மேற்கொண்ட ஸ்ரீசத்யதீர்த்த மகாமுனி, உத்தரவாகினியாக ஓடும் துங்கபத்ரா நதிக்கு வந்தார். இது, கங்கைக்கு இணையான நதி தீரம்; காசிக்கு இணையான தலம். ஸ்ரீசத்யதீர்த்த மகாமுனி, துங்கபத்ரையில் ஸ்நானம் செய்தார். அப்போது, அவரது தண்டம் ஆற்றில் மூழ்கி, பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. சுவாமிகள் அந்தத் தண்டத்தை எடுக்க முனைந்தபோது, பாறை இடுக்கில் இருந்து வந்தது தண்டம் மட்டுமல்ல; ஸ்ரீசந்தான வேணுகோபால கிருஷ்ணரின் விக்கிர கமும்தான்! கிருஷ்ணரின் அழகில் சொக்கிப்போன சுவாமிகள், அந்த விக்கிரகம் கிடைத்த இடத்தில், நதியின் கரையில், ஸ்ரீமடம் ஒன்றை ஸ்தாபித்தார்.

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!
துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

அடுத்து, அங்கேயே கோயிலும் உருவா னது. அதையடுத்து, 'ஸ்ரீஜகத்குரு பத்ரி சங்கராச்சார்ய சமஸ்தானம் க்ஷேத்திர சகடபுர ஸ்ரீவித்யா பீடம்' மெள்ள மெள்ளத் தழைத் தோங்கியது! விஜயநகர மன்னர்களில் ஒருவரான ஸ்ரீவிரூபாக்ஷராயர் மற்றும் வேறு பல அரசர்களும் இந்தப் பீடத்துக்கென ஏராள மான நிலங்களைத் தானம் தந்துள்ளனர்.

இன்னும் சில சிறப்புகளும் இந்தப் பீடத்துக்கு உண்டு. தருமரிடம், 'இந்த இடத்துக்கு 'கோ பாதுகாஸ்ரமம்' என்று பெயர். நான் தவழ்ந்ததும், விளையாடியதும், வேணுகானம் இசைத்துப் பசுக்களை மேய்த்ததும் இங்கேதான்' என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதாக விவரிக்கிறது பிரமாண்ட புராணம். அதுமட்டுமின்றி, கண்ணுக்குத் தெரியாமல், இங்கே பூமிக்கடியில் 60 புண்ணிய நதிகள் ஓடுவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் விவரித்துள்ளார். இந்தத் தலத்தில் தானம் செய்பவர்களுக்கு, தானத்தின் பலன் உடனே கிடைக்குமாம். இங்கே சித்தர்கள் பலர் தவம் செய்துள்ளதால், இதனை சித்தர் க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.

வாமதேவ மகரிஷி தம்பதி, இந்தத் தலத்தில் சூர்ய யாகம் நடத்தியதன் பலனாக பிள்ளை பாக்கியம் பெற்றனராம். அந்தக் குழந்தைக்கு சுமேதாருணர் எனப் பெயர் சூட்டினர். சுமேதாருணர் வளர்ந்த தும் பிரம்மாவை எண்ணித் தவம் இருந்து, ''இந்த க்ஷேத்திரம் லோக க்ஷேமத்துக்குப் பயன்பட வேண்டும்'' என்று வரம் பெற்றாராம். வரத்துடன், சக்கரங்கள் பொருத்திய சிறிய வண்டி ஒன்றையும் தந்தார் பிரம்மன். இதனால், சுமேதாருணருக்குச் சகட மகரிஷி என்றும், இந்தத் தலத்துக்கு ஸ்ரீக்ஷேத்திர சகடபுரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர்.

ஸ்ரீபத்ரிகாஸ்ரம ஜ்யோதிஷ் பீடத்தின் 32-வது சுவாமிகள் ஸ்ரீராமச்சந்திரானந்த தீர்த்த ஸ்ரீபாதர்; இவர் தேர்ந்தெடுத்த ஜகத்குரு ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள், தற்போதைய (33-வது) பீடாதிபதியாக, தனது 13-வது வயதில் பொறுப்பேற்றார்.

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

அத்வைத தத்துவத்தை வலியுறுத்தும் ஸ்ரீமடத் தின் இன்னொரு சிறப்பு, ஸ்ரீசந்தான வேணு கோபாலகிருஷ்ணர் ஆலயம். நுழைந்ததும்...ஸ்ரீலட்சுமிநரசிம்மர், அடுத்து ஸ்ரீசந்தானவேணு கோபாலகிருஷ்ணர், அவரையடுத்து ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். மூர்த்தங்கள் மூன்றுமே தக தகக்கின்றன; எனினும், ஸ்ரீகிருஷ்ணர் அப்படியரு அழகு!

ஆலயத்தில், ஸ்ரீவித்யா மகாகணபதி சந்நிதியும், மூடு தேங்காய் பிரார்த்தனையும் வெகு பிரபலம். 108 அல்லது 1008 தேங்காய்களை விநாயகரின் திருமேனியில் அடுக்கி வைத்து மூடிவிட்டுப் பிரார்த்திக்கின்றனர். அர்ச்சனைக்குப் பிறகு, அந்தத் தேங்காய்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்தப் பிரார்த்தனையால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஸ்ரீசந்தான வேணுகோபால கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

துங்கபத்ரா நதிக்கரையில்... கோயில் கொண்ட கோபாலன்!

கோயிலில் உள்ள, லோக சங்கர யக்ஞ மண்டபத்தில், ஆகம சாஸ்திரப்படி ஒன்பது யாககுண்டங்கள் உள்ளன. எதிரிகள் தொல்லை, பிள்ளை வரம் இல்லாத குறை, தீராத நோய் என அவதிப் படுபவர்களுக்காக நித்திய ஹோமம் இங்கே நடைபெறுகிறது.

மேலும், அட்சய திருதியை நாளில், ரத உத்ஸவத்தில் வீதியுலா வரும் ஸ்ரீசந்தான வேணுகோபாலகிருஷ்ணரைத் தரிசிக்க, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து குவிகின்றனர். சங்கர ஜயந்தி மற்றும் நவராத்திரி நாட்களிலும், விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. இந்தத் தலத்துக்கு, சிருங்கேரி மற்றும் கொப்பா ஆகிய ஊர்களில் இருந்து பஸ் வசதி உண்டு. இங்கே பக்தர்கள் தங்குவதற்கான காட்டேஜ் மற்றும் தங்கும் அறைகளும் உள்ளன. சென்னை, கிழக்குத் தாம்பரம் அகத்தியர் தெருவில், ஸ்ரீமடத்தின் கிளை மடம் இயங்கி வருகிறது.

க்ஷேத்திர சகடபுரத்துக்குச் சென்று, ஸ்ரீகிருஷ்ண ரைத் தரிசியுங்கள்; சங்கடமெல்லாம் தீரும்!

- படங்கள் கே. கார்த்திகேயன்