தியானம், ஆவாஹனம், ஆசனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், மதுபர்க்கம், ஸ்நானம், வஸ்திரம், உத்தரீயம், ஆபரணம், சந்தனம், குங்குமம், அட்சதை, புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம், கற்பூர ஆரத்தி, மந்திரபுஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஆகியவை பூஜைகளில் அடங்கும் உபசாரங்கள்.
அதற்குப் பிறகு சிறப்பு உபசாரமும் உண்டு. குடை, சாமரம், நிருத்தம், பல்லக்கு, ரத ஆரோஹணம், அச்வ ஆரோஹணம், கஜ ஆரோஹணம், ராஜோபசாரம், வாத்தியம், பாட்டு, நான்கு வேதங்கள், ச்ரௌத சூத்திரங்கள், புராணங்கள், உலக நன்மைக்காக வாழ்த்து ஆகிய அத் தனையும் பூஜைக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் உபசாரங்கள். இவை அனைத்தும், உலக நன்மைக்காக உலகத்தை இயக்கும் உலகநாதனுக்காக அன்றாடம் செய்யும் உபசாரங்கள் ஆகும்.
|