கல்வி-ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி அருள்பவர்; அதனால், தென்முகக்கடவுள் எனப் போற்றப்படுபவர் என்றெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவரே, திசைக்கு ஒருவராக எட்டுத் திக்குகளிலும் காட்சி தரும் திருத்தலம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கீழமங்கலம். இங்கு ஸ்ரீஞானாம்பிகையுடன் அருளும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட தட்சிணாமூர்த்தியரை தரிசிக்கலாம்.
கிழக்குத் திசையில்- ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி; வட கிழக்கில்- ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி; தென்கிழக்கில்- ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி; தெற்கில்- ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி; தென்மேற்கில்- ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி; மேற்கில்- ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி; வடமேற்கில்- ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி, (பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்); வடக்கில்- ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) என தரிசனம் தருகின்றனர்.
படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர்... இந்தத் தலத்துக்கு வந்து அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.
|