ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

விளக்கு பூஜை: தென்காசி

விளக்கு பூஜை: தென்காசி


சிறப்பு கட்டுரை
விளக்கு பூஜை தென்காசி
விளக்கு பூஜை: தென்காசி

ட்சிணகாசி எனப்படும் தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தில், சக்தி விகடன் மற்றும் நயஹா இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 14.5.10 அன்று விமரிசையாக நடந்தேறியது. சக்தி விகடன் நடத்தும் 35-வது திருவிளக்கு பூஜை, இது! நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குளம், புளியங்குடி எனப் பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர் வாசகிகள்.

பூஜையில், தனி உற்சாகத்துடன் இருந்தார் ஜோதி. ''பிளஸ்டூ பரிட்சைல அதிக மார்க் எடுக்கணும்னு சொல்லி உலகம்மனுக்கு விளக்கேத்தறதா வேண்டிக்கிட்டேன். ரிசல்ட்டும் வந்துச்சு. 1,123 மார்க்! உடனடியா அம்மனுக்கு விளக்கேத்தலாம்னு நினைச்சிட்டிருந்தப்ப... சக்தி விகடன் இங்கே விளக்கு பூஜை நடத்தற அறிவிப்பு! சந்தோஷத்துக்கும் மனநிறைவுக்கும் கேக்கணுமா, என்ன!''- சொல்லும்போதே, ஜோதியின் முகத்தில் அப்படியரு ஜோதிப் பிரகாசம்!

விளக்கு பூஜை: தென்காசி

''எங்க அண்ணன் டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம் எழுதியிருக்கான். அதுல அவன் பாஸ் பண்ணி, நல்ல வேலை கிடைக்கணும்னு கலந்துக்கிட்டேன்'' என்று பாசம் பொங்கச் சொல்கிறார் நெல்லை வாசகி லட்சுமி.

விளக்கு பூஜை: தென்காசி

''நான் ஆறாவது முறையா கலந்துக்கறேன்'' என்று சொல்லும் புளியங்குடி சுந்தரம்மாள் பாட்டிக்கு வயது 74. பேராசிரியை கயற்கண்ணி, ''ஏற்கெனவே மதுரைல நடந்தப்ப கலந்துக்கலியேனு வேதனை. இப்ப சொந்த ஊர்ல நடந்தும் கலந்துக்கலேன்னா எப்படி? அதான், எல்லா வேலையையும் போட்டுட்டு ஓடி வந்துட்டேன். இங்கே வந்தா... விளக்குபூஜையைத் துவக்கறதுக்கு, விளக்கேத்த என்னைக் கூப்பிட்டாங்க. இது எனக்குக் கிடைச்ச டபுள் சந்தோஷம்!'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். பூஜையில் கலந்துகொண்ட வாசகியருக்கு, கோவை வாசகி நிரஞ்சனி, ஜாக்கெட் பிட் வழங்கினார். பரவசத்துடன் பேசினார் நாகஸ்வர வித்வான் விஜயா. ''விளக்கு பூஜைகள்ல, நாகஸ்வரம் வாசிச்சிருக்கேன். ஆனா, சக்தி விகடனோட விளக்குபூஜைல விளக்கேத்தி வழிபடணும்னு ஆசை. அது இன்னிக்கி நிறைவேறிடுச்சு!'' என்றார் நெகிழ்ச்சியோடு!

- இ. கார்த்திகேயன், படங்கள் எல். ராஜேந்திரன்