இதுகுறித்து, சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார்?
''அறம் வளர ஆலயம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (குர்யாத் யசோ தர்மாபிலிருத்தயே). தேவதைகளின் இருப்பிடம் கோயில்கள்; அறத்தை வளர்ப்பதுடன் கோயிலை உருவாக்கியவரின் புகழையும் வளர்க்கும்! உடலில்... இதயத்தில் ஆத்மா குடியிருக்கிறது எனில், தேசத்தின் இதயமான
ஆலயத்தில் பரமாத்மா குடியிருக்கிறார். உடலுறுப்புகள் வலுவிழந்தால், உடலையும் உள்ளத்தையும் பாதிப்பதுபோல், மக்களின் செயல்பாட்டில் விபரீதங்கள் இருப்பின், அது ஆள்பவர்களையும் ஆலயங்களையும் பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். இதைத்தான் அதர்மம் என்கிறோம்.
அதுமட்டுமா?! காற்று தூய்மையை இழக்கும்; தண்ணீர் கெடும்; நிலம், பயிர்கள், அந்த விளைச்சலில் கிடைத்த உணவைச் சாப்பிட்ட மக்கள்... எனச் சங்கிலித் தொடராக மாசு பரவும். இது மனிதனது சிந்தனையைப் பாதிக்கும்; இதனால், அவன் தகாத செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கும். இதன் தாக்கம் ஆலயங்களையும் பாதிக்கும்.இவற்றால் சினம் கொள்ளும் தேவர்கள், விபரீதங்களை நிகழ்த் துவர் என்கிறது சாஸ்திரம். இதனை 'உத்பாதம்' (பேரழிவு) என்பர்.
ஆலயம், கோபுர வாசல், கொடி மரம் ஆகியவை இயற்கையாலும் பராமரிப்பின்றியும் நிலைகுலைந்து சரிவது பேரழிவுக்கான எச்சரிக்கை மணி என்கிறார் வராஹமிஹிரர் (ப்ரா சாத பவள தோரண கேத்வாதி...).
தற்போதைய தேவை... தனிமனித ஒழுக்கம்; இறைச் சிந்தனை; ஆலயப் பராமரிப்பு! மனிதர்களிடம் நல்லொழுக்கம் இருந்துவிட்டால், இறைச் சிந்தனையும், அதைத் தொடர்ந்து ஆலயங்களைப் பராமரிக்கும் ஆசையும் தானாக வந்துவிடும். ஜனங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் காட்டுகிற ஆர்வத்தைத் தனிமனித ஒழுக்கத்திலும் காட்டினால் தேவலை!'' என்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
கோபுரம் இடிந்ததை துர்ச் சகுனமாகக் கருதாமல், தனி மனித ஒழுக்கம் பேண இறைவன் நமக்கு விடுத்த எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்வோம். இறைவனைப் பிரார்த்திப்போம்!
- இர. ப்ரீத்தி, ந. வினோத்குமார்,
படங்கள் கே. கார்த்திகேயன், எஸ். கிருஷ்ணமூர்த்தி |
|
|
|