ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தேவி தரிசனம்... பாப விமோசனம்

தேவி தரிசனம்... பாப விமோசனம்


தொடர்கள்
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்

ண்ட சராசரங்களுக்கும் ஆதிநாயகியாம் பராசக்தி, ஜவ்வாது மலைக்கு அருகில், பாலாற்றின் தென் கரையில், வெட்டுவாணம் எனும் ஊரில் எல்லையம்மனாக அருளாட்சி நடத்தி வருகிறாள்.

வேலூரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது வெட்டுவாணம். படவேட்டில் ஸ்ரீரேணுகாம்பாளாகக் குடிகொண்டிருப்பவள், இங்கே எல்லையம்மனாக அருள்பாலிக்கிறாள்.

ஒருகாலத்தில், குண்டலிபுரம் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் கோட்டை கட்டி, படைவீடு அமைத்து போர் புரிந்தானாம் நன்னன் எனும் மன்னன். அழகு கொஞ்சும் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நதியானது இரண்டு கிளைகளாகப் பிரிந்து, படவேடு வழியாக ஒன்றும், வெட்டுவாணம் வழியே ஒன்றுமாகப் பிரிந்து செல்கிறதாம். இரண்டுமே புண்ணிய நதிகள் எனப் போற்றுகின்றன ஸ்தல புராணம்.

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு விசு, விஸ்வாஸ், விஸ்வரூபன், பரஞ்ஜோதி மற்றும் பரசுராமன் என ஐந்து புதல்வர்கள்.

ஜமதக்னி முனிவர் பூஜை செய்யத் தேவையான தண்ணீரை எடுத்து வருவதற்காக, ரேணுகாதேவி வழக்கம் போல் ஒருநாள் ஆற்றுக்குச் சென்றபோது, நீரில் பிரதிபலித்த கந்தர்வனது திருமுகத்தைக் கண்டு, அவனது அழகில் சில நிமிடம் மெய்ம்மறந்து நின்றாள். இதைத் தனது ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் கோபம் கொண்டு, தன் மகன்களை அழைத்து, ரேணுகாதேவியின் தலையை வெட்டி எறிய உத்தரவிட்டார். தாயின்மீது கொண்ட பாசத்தால், முதல் நான்கு மகன்களும் இதற்கு மறுத்துவிட, அவர்களைச் செடி-கொடிகளாக மாறும்படி சபித்தார் ஜமதக்னி.

தேவி தரிசனம்... பாப விமோசனம்

பின்பு, ஐந்தாவது மகனான பரசுராமரை அழைத்து, தாயாரின் தலையை வெட்டும்படி பணித்தார். தந்தையின் சொல்லை மீறாத பரசுராமரும், அதற்கு ஒப்புக்கொண்டார்.

பரசுராமர் தந்தையின் ஆணையை நிறைவேற்ற, தாயாரை வனத்துக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்து தப்பித்துக் காட்டுக்குள் ஓடினாள் ரேணுகாதேவி. அங்கே அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் சென்று, தனக்கு அடைக்கலம் தரும்படி வேண்டினாள். அதே நேரம் அங்கு வந்த பரசுராமர், உதவக்கூடாது என அந்தப் பெண்ணிடம் கண்டிப்புடன் சொன்னார். ஆனாலும் அந்தப் பெண், ரேணுகாவுக்கு உதவ முன்வர, கோபம் கொண்ட பரசுராமர், தாயார் மற்றும் அந்தப் பெண் ஆகிய இருவரின் தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.

தனது ஆணையை நிறைவேற்றிய மகனுக்கு இரண்டு வரங்கள் தந்தாராம் ஜமதக்னி முனிவர். இந்த வரங்களின் மூலம், தாயையும் அந்தப் பெண்ணையும் உயிர்ப்பிக்க முனைந்தார் பரசுராமன். ஆனால், அவசரத்திலும் பதற்றத் திலும், தாயார் ரேணுகாதேவியின் உடலில் அந்தப் பெண்ணின் தலையையும், அவளின் உடலில் தாயாரின் தலையையும் மாற்றிப் பொருத்திவிட்டார்! பரசுராமர் தாயாரின் தலையை வெட்டிய இடமே வெட்டுவாணம் என்றும், (தலை மாறிப் பொருத்தியதால், மாரியம்மன் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்வர்). அதுவே, வெட்டுவாணம் அம்மன் ஆலயம் எனப் போற்றப்படுகிறது.

தேவி தரிசனம்... பாப விமோசனம்

ஒரு விவசாயி, மண்வெட்டியால் நிலத்தில் கொத்தி வேலை செய்து கொண்டிருந்தபோது, மண்வெட்டியில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. பதறிப்போனவர் ஊர்மக்களை அழைத்துவந்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, அங்கே அம்மன் விக்கிரகம் ஒன்று, தலையில் காயத்துடன்

தேவி தரிசனம்... பாப விமோசனம்

தென்பட்டதாம். அப்போது அங்கிருந்த ஒருவர் சாமியாடி, ''நான்தான் எல்லையம்மன். இங்கே எனக்கு கோயில் கட்டிக் கும்பிடுங்கள்'' என்று அருள்வாக்கு சொல்ல... அதன்படி எழுப்பப்பட்டதே வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் என்றும் ஓர் கதை உண்டு.

அழகிய, சிறிய ஆலயம்; தன்னை நாடி வருவோரின் அனைத்துக் குறைகளையும் நீக்கி அருள்கிறாள் எல்லையம்மன். திருக்குளமும், புற்றுக் கோயில் ஒன்றும் அருகில் உள்ளது.

இங்கு வந்து பிரார்த்தித்தால், தீராத நோயும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். எட்டு நாகங்களுடன் எல்லையம்மன் காட்சி தருவதால், இது நாகதோஷம் நீக்கும் தலம் என்றும் போற்றுகின்றனர்.

ஆடிப் பெருக்குத் திருவிழா இங்கே பிரசித்தம். பிரம்மோத்ஸவப் பெருவிழாவாக பத்து நாள் நடைபெறும் இந்த விழாவுக்கு, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பக்தர்கள் பலரும் ஆலயத்துக்கு வந்து, அம்மனை தரிசித்து, அருள்பெற்றுச் செல்கின்றனர். வியாழன்தோறும் நாகதோஷ நிவர்த்திக்கான சிறப்பு பூஜையும் நடை பெறுகிறது.

வெட்டுவாணம் எல்லையம்மனை தரிசியுங்கள்; வீடு-வாசல் அனைத்தும் தந்து, நம்மையும் நம் சந்ததியையும் செழிக்கச்செய்வாள் எல்லையம்மன்!

திருவருள் தரும் திருக்கருகாவூர்

தேவி தரிசனம்... பாப விமோசனம்

றைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் குமரன் அருள்பாலிக்கும் திருவடிவை சோமாஸ்கந்த மூர்த்தம் என்பர்.

இதே அமைப்பில் சிவன் சந்நிதி, அடுத்து முருகன் சந்நிதி. அதையடுத்து அம்பாள் சந்நிதி என இருக்கும் கோயில்களை சோமாஸ்கந்த அமைப்புக் கோயில்கள் என்பார்கள்.

திருக்கருகாவூர் அருள்மிகு முல்லை வனநாதர் கோயில் சோமாஸ்கந்த அமைப் புடன் திகழ்கிறது. ஸ்ரீமுல்லைவனநாதர் சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீஆறுமுகர் சந்நிதி, அவரது சந்நிதிக்கும் இடப்புறம் அம்பாள் ஸ்ரீகருகாத்த நாயகி சந்நிதி என அமைந்திருப்பது சிறப்பு.

இந்தத் திருத்தலத்தின் முருகப் பெருமானை திருப்புகழ் சிறப்பிக்கிறது. இங்கு வந்து ஸ்வாமி, அம்பாள், மற்றும் முருகனை வணங்கிச் செல்ல நினைத்தது யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

- ஜெயலெட்சுமி கோபாலன், சென்னை-64

மூன்று கிரகங்கள் வழிபட்ட சிவாலயம்

திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருநெல்லிக்கா. இங்கு அருள்பாலிக்கும் ஸ்வாமிக்கு ஸ்ரீநெல்லிவனநாதர்' என்று பெயர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்கள நாயகி.

இந்தத் தலத்தின் இறைவனை சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய மூன்று கிரகங்களும் வழிபட்டதாக புராணங்கள் விவரிக்கின்றன. இங்கு சூரியபகவானால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடி இறைவனை வழிபட, எல்லா நோய்களும் நீங்கும் என்பதால், அதற்கு 'ரோக நிவாரண தீர்த்தம்' என்று பெயர்.

- விஜயா, திருச்சி-13

- யா. நபிசா
படங்கள் எம். ரமேஷ்பாபுஎஸ்.