<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr><td align="right" class="Brown_color" height="25" valign="middle">ஈசனின் திருத்தலங்கள்</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color" width="100%"><tbody><tr><td align="left" class="brown_color_bodytext" height="30" valign="top"><strong>காளையார்கோவில் தேவாரத் திருவிலா! </strong></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="right" class="brown_color_bodytext"><strong>டாக்டர் சுதா சேஷய்யன்</strong></p> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><strong>மு</strong>த்திரை மோதிரத்தையும் செங்கோலையும் குப்பமுத்து ஆசாரி வேண்டியபடி அவரிடமே ஒப்படைத்த பெரிய மருது, தேரை நகர்த்தும்படி இறைவனை மனதார வேண்டினார். அருகிலிருந்த சின்ன மருதுவும் அப்படியே வேண்ட.... </p> <p>அதுவரை அங்குலம் நகராத தேர், வெண்ணெயாக வழுக்கிக் கொண்டு ஓடியது. மக்களும் அரசரும் ஆன்மிகமும் ஒன்றாகக் கலந்த இந்தச் சம்பவத்தைப் பற்றிய பாடலும் உண்டு. </p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">மருது வந்தாலும் தேரோடாது -- அவன்<br /> மச்சினன் வந்தாலும் ஓடாது<br /> தேருக்குடையவன் குப்பமுத்து ஆசாரி<br /> தேர்வடம் தொட்டாலே தேரோடும்</td> </tr></tbody></table> <p>இதற்கு இன்னும் கூட சில நெகிழ்ச்சியான மாறுபாடுகள் உள்ளன. தேர் நகர மறுத்தபோது, குப்பமுத்து ஆசாரியை அழைத்து வழி கேட்டதாகவும், 'தன்னை ஒரு நாள் அரசராக்கினால் தேர் ஓடும்' என்று அவர் தெரிவித்ததாகவும் தகவல் உண்டு. 'தேர் ஓட வேண்டுமானால் அரசாட்சி முக்கியமில்லை!' என்று எண்ணிய மருது உடனே அவரை அரசராக்கினார். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>தேர் ஓட ஓடத் தேர்த்தட்டில் அமர்ந்து வந்தார் குப்பமுத்து. பின்னால் நடந்தனர் மருதிருவர். மேடு பள்ளங்களில் ஆடி ஆடி வந்த தேர், சரிவு ஒன்றில் நிலைதடுமாறியது! மக்கள், கஷ்டப்பட்டுத் தேரைக் கட்டுப்படுத்த, ஆட்டத்தில் கீழே விழுந்து விட்ட குப்பமுத்து மீது தேர்ச் சக்கரம் ஓடியிருந்தது. </p> <p>பெரிய மருது பதறி வந்து பார்க்க, அவரைப் பார்த்த படியே குப்பமுத்து நிரந்தரமாகக் கண்மூடினார்; குப்பமுத்துவின் தகாத ஆசைக்குக் கிடைத்த தண்டனை என்று சிலர் முணுமுணுத்தனர்; மரணப் பிடிக்குள்ளிருந்து நீண்ட குப்பமுத்துவின் கையில் ஓர் ஓலை! </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>எடுத்துப் பிரித்தால், 'தேரோடும் நாளில், நாட்டு அரசர் பலியாவார்!' என்ற நாடிச் செய்தி. குப்பமுத்துவின் தியாகமா, மருதுவின் பணிவா, இவர்கள் எல்லோரின் இறை பக்தியா... எது பெரியது என்பது புரியாமலே, காளையார்கோவில் பெரிய கோபுரத்தின் உள்ளே நுழைகிறோம். </p> <p>காளையார் கோயிலில், மூன்று மூலவர் சந்நிதிகள். மூன்றுமே கிழக்கு நோக்கியவை. பழைமையான காளீஸ்வரர் சந்நிதி நடுநாயகமாக விளங்க, அதற்குத் தெற்காக இருப்பது சோமேஸ்வரர் சந்நிதி; காளீஸ்வரருக்கு வடக் காக சுந்தரேஸ்வரர். அதாவது, கோயிலைப் பார்த்தபடி நாம் நின்றால், நமக்கு இடது புறமாக சோமேஸ்வரர், வலது புறமாக சுந்தரேஸ்வரர். </p> <p>சோமேஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பதுதான் மருது பாண்டியர் கட்டிய பெரிய கோபுரம். காளீஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பது சிறிய கோபுரம். பெரிய கோபுரமே இப்போது பிரதான வாயில். </p> <p>அண்ணாந்து பார்க்கும்போது, பெரிய கோபுரத்தின் அபரிமிதமான அழகு புலப்படுகிறது. ஒன்பது நிலைகள். அதனாலேயே, இதற்கு நவசக்தி கோபுரம் என்றும் பெயர். 155.5 அடி உயரத்தில் கண்ணைப் பறிக்கும் நேர்த்தி. கோபுரம் கட்டுவதற்குச் செங்கற்கள் கொண்டு வந்த கதையை முன்னரே கண்டோம். </p> <p>மானாமதுரையிலிருந்து காளையார்கோவில் வரை வரிசையாக ஆட்கள் நிற்க, ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றி மாற்றியே செங்கற்கள் கொண்டு வரப்பட்டனவாம். கருங்கற்கள், கருமலையிலிருந்தும் திருமலையிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>1781-ல் தொடங்கப்பட்ட கோபுரப் பணி 1800-ல் நிறைவடைந்தது. கோபுரத்தின்மீது ஏறிப் பார்த்தால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குக் கோபுரமும், குன்றக்குடி முருகன் ஆலயமும் தெரிகின்றன. </p> <p>கோபுரம் கட்டப்பட்டதைப் பற்றியும் அதற்கான முயற்சிகள் பற்றியும், செவிவழிச் செய்திகள் பலவும் நிலவுகின்றன. இவற்றில் சுவாரஸ்யமான கதையன்று கோபுரம் கட்டத் தொடங்கிப் பணிகள் தொடர்ந்த நிலையில், அதே இடத்தில் நீரூற்று ஒன்று கிளம்பியதாம். என்னென்னவோ செய்து பார்த்தும் ஊற்றுக்கண்ணை மூட முடியவில்லை. அண்ணன் வெள்ளை மருதுவின் (பெரிய மருதுதான்) வெள்ளை உள்ளம் தெரிந்த சின்ன மருது, 'ஊற்றுக் கண்ணை அடைக்க வழி சொல்பவர்க்குத் தக்க சன்மானம் தரப்படும்' என்று அறிவித்தார். </p> <p>இளைஞன் ஒருவன் வந்து நின்றான். பார்த்தால் பரம பக்கிரி. சிற்ப வல்லுநர்களுக்கு அவனைக் காணும்போதே ஏளனம். 'எங்களுக்கே தெரியவில்லை; இவனுக்கென்ன தெரியப் போகிறது?' என்ற எண்ணம் அவர்களுக்கு. சுலைமான் என்ற அந்த </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>இஸ்லாமிய இளைஞன், தனது முன்னோர் கட்டடக் கலை வல்லுநர்கள் என்பதால், அவர்களின் திறனால் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதாகக் கூறினான். அவனைக் கனிவோடு அணைத்துக் கொண்ட வெள்ளை மருது, 'கோபுரம் கட்ட வேண்டும், அதற்காக எதுவும் செய்ய ஆயத்தம்' என்று பணிந்து கேட்க, சுலைமான் வழி சொன்னான். </p> <p>ஆயிரம் குடங்களில் மணலும் ஆயிரம் குடங்களில் அயிரை மீனும் கொண்டு வரச் சொன்னானாம். ஊற்றுக்கண்ணில், முதலில் நூறு குடம் மணல், பின்னர் நூறு குடம் மீன் என்று மாற்றி மாற்றிக் கொட்டினானாம். மணலை மீறிப் பொங்கிய ஊற்று நீரை, அந்த இடை வெளிகளுக்குள் பாய்ந்த அயிரை மீன்கள் அடைத்துக் கொள்ள, மூக்கின்மீது விரல் வைத்து மக்கள் வியந்தனர். தனக்குச் சன்மானம் ஏதும் வேண்டாம், மருது சகோதரர்களின் அன்பு மட்டும் போதும் என்று குறிப்பிட்ட சுலைமான், வெள்ளையர்களை எதிர்த்த போரில், தாய்மண்ணுக்காகப் போரிட்டு வீர மரணம் அடைந்தான். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>காணக் காணப் பரவசப்படுத்தும் பெரிய கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். நேராக இருப்பது, அருள்மிகு சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் பிராகாரத்தையும் கருவறையையும் மருது பாண்டியர்களே சீர்படுத்திப் பெரிதாகக் கட்டினார்கள். இந்தச் சந்நிதிக்கு வடக்காகவும் கோயிலின் நடுநாயகமாகவும் இருப்பது காளீஸ் வரர் சந்நிதி. ஆதி கோயிலான இங்கிருந்தே நம்முடைய தரிசனத் தைத் தொடங்கலாமா?</p> <p>காளீஸ்வரரே, தேவாரப் பாடல் பெற்றவர். இந்தச் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம், ஐந்து நிலைகளைக் கொண்டது. பேச்சு வழக்கில் சிறிய கோபுரம் என்று அழைக்கப்பட்டாலும், ஐந்து நிலைகளுடன் 'பஞ்சபூத கோபுரம்' என்னும் பெயர் கொண்டது. சுமார் 84 அடி உயரம் கொண்ட இதனை 7-ஆம் நூற்றாண்டில் மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னர் கட்டினார். </p> <p>எந்தக் கோபுரம் வழியாக நுழைந்தாலும், நாம்</p> <p>3-ஆம் பிராகாரத்தை (வெளிப் பிராகாரம்) அடைகிறோம். நேரே காளீஸ்வரர் மூலவரை தரிசிக்கச் செல்வோம், வாருங்கள். 3-ஆம் பிராகாரத்திலிருந்து 2-ஆம் பிராகாரத்தையும் முதல் பிராகாரத்தையும் தாண்டி, மூலவர் சந்நிதி வாயிலில் உள்ள துவாரபாலகர்களை வணங்கி, கருவறை அர்த்த மண்டபத்தை அடைகிறோம் கல்வெட்டுகளில், </p> <p>'கானப்பேர் நாயனார்', 'திருக் கானப்பேருடைய காளையர் நாயனார்' முதலான பெயர்களால் வழங்கப்படுகிற காளீஸ்வரரே, இந்தத் தலத்தின் ஆதி தெய்வம்.</p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்<br /> தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய<br /> தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்<br /> நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே </td> </tr></tbody></table> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>என்று திருஞானசமபந்தப் பெருமான் பாடித் துதிக்கிற காளீஸ்வரர்... சொர்ண காளீஸ்வரர், தட்சிண காளீஸ்வரர், மகாகாளர் என்றும் வணங்கப்படுகிறார். காளி வணங்கியதால் இவர் காளீஸ்வரர். காளி வணங்கியது எப்போது? அதுவொரு பெரிய வரலாறு!</p> <p>கயிலாயத்தில் பரமனும் பார்வதியும் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐயனின் திருக்கண்களை அம்மை பொத்தியது தெரியுமல்லவா! அங்கேதான் கதை தொடங்குகிறது. ஐயன் விழிகளைப் பொத்திய தால், உலகம் இருண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனார், அம்மையைக் காளியாகும்படி சாபமிட்டார். </p> <p>கரிய உருவமும், கோரைப் பற்களும், கொடூர முகமும் கொண்டு காளியாக மாறிய அம்மை, வனங்களில் வலம் வந்தார். அதே நேரம், சண்டாசுரன் எனும் அரக்கனால் துன்பப்பட்ட மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும், அவனிடமிருந்து காக்கும்படி, காளியை வழிபட்டனர். உடனே தமது பரிவார தேவதைகளான யக்ஷினிகளோடு சண்டாசுரனைப் போருக்கு அழைத்தார் அன்னை. அவனோடு சண்டையிடுவதற்காகக் கோட்டை அமைக்கப்பட்டது. </p> <p>மாயாஜால முறையில் வல்லவனான சண்டாசுரன், தன் வடிவை மறைத்துக் கொண்டு மேகமாக மாறினான். அவன் எங்கே என்பதை அறியாத காளி, தம் கண்ணில் அவன் தெரியவேண்டும் என்பதற்காகக் கடுந்தவம் மேற்கொண்டார். அம்மையின் தவத்தைக் கலைக்க அவர் மீது அம்பு மழை பொழிந்தான் அரக்கன். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>அம்மையின் கடுமையான தவத்துக்காக உடனே தோன்றிய திருமால், தமது கருட வாகனத்தையும் சக்கரப் படையையும் கொடுத்தார்; சண்டாசுரன் மேகமாக நிற்பதையும் காட்டித் தந்தார். கருடன் மீதேறிய காளி, விந்திய மலைக்குச் செல்ல... கருடனின் வாசம் பட்டு அங்கு ஓர் அமுத கலசத் தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நாகம் விலகி யது. அமுத கலசத்தைப் பெற்ற காளி மீண்டும் தனது கோட்டையை அடைந்தார். பரிவார தேவதைகளைச் சுற்றி நிற்கச் சொல்லி விட்டு, சண்டாசுரன் மீது அம்பெய்ய... அவன் வீழ்கிற அதே நேரத்தில் அமுத கலசம் உடைக்கப்பட்டது. அரக்கனது கொடுமையின் விளைவுகளிலிருந்து எல்லோரையும் அமுத கலசம் காப்பாற்றியது. <br /><br /> கோட்டை அமைக்கப்பட்ட இடம்- தேவி கோட் டையாகி, பின்னர் (இப்போதும்) தேவகோட்டை ஆனது. அம்மை தவம் செய்த இடம்- உருவாட்டி. சண்டாசுரன் மாய உரு நீங்கி மாண்டு விழுந்த இடம்- மானகண்டான். காளிதேவி வெற்றி பெற்ற இடம்- வெற்றியூர். இதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று நடக்கவில்லை. கயிலாய விளையாட்டுக்காக ஐயனிடம் சாபம் பெற்ற அம்மையின் கோர உருவம் நீங்கவில்லை. அம்மைக்குச் சாபம் கொடுப்பதன் மூலமாக, சண்டாசுரனுடைய கொடுமையை ஒழிப்பதற்கும் வழிவகுத்த சிவபெருமான், மெள்ளச் சிரித்தார். புரிந்து கொண்ட காளிதேவி, தமது வாளைக் குறுக்காக நிறுத்தி அதன் மீது நடந்தார். வாளின் நுனி நின்ற இடம், ருத்திர தீர்த்தக் கரை. அங்கேயே காளிதேவி தவம் செய்து, சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>காளி வழிபட்டதால் காளீஸ்வரர் ஆன பரம் பொருள், அம்மையின் அப்போதைய கருவுருவம் மாறி, தங்க நிறம் படைத்தவராகப் பிரகாசிக்க அருளினார். அவ்வாறு மாறிய அன்னையை அருள்மணமும் புரிந்தார். இதனால், அம்மைக்கு சொர்ணவல்லி (சொர்ணம்- சுவர்ணம் - தங்கம்), தங்க நாச்சியார் ஆகிய திருப்பெயர்கள் ஏற்பட்டன. சுவாமியே சொர்ணகாளீஸ்வரர் என்று வழங்கப்படுகிறார். </p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்<br /> தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு<br /> உண்டதனுக்(கு) இறவா(து) என்றும் இருந்தவனை<br /> ஊழி படைத்தவனோ(டு) ஒள்ளரியும் உணரா<br /> அண்டனை அண்டர்தமக்கு ஆகம நூல்மொழியும்<br /> ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம்<br /> கண்டனை அன்பொடுசென்று எய்துவது என்றுகொலோ</td> </tr></tbody></table> <p>கார்வயல் சூழ்கானப்பேருறை காளையையே என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிப் பரவுகிற ஆதியை, ஐயனை, அருள்மிகு காளீஸ்வரப் பெருமானை வணங்கி நிற்கிறோம். வட்டமான ஆவுடையாருட னும், குட்டையான பாணத்தோடும் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார்; இவர் சுயம்பு. </p> <p>காளீஸ்வரரை வணங்கி விட்டு, பிராகாரத்தை வலம் வருகிறோம். காளீஸ்வரர் கருவறைக்கும் முதல் பிராகாரத்துக்கும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் குலசேகர தேவன் முதலான பாண்டிய மன்னர்கள் ஏராள மான திருப்பணிகள் செய்துள்ளனர். வாணஅரசரான சுந்தரத் தோளுடையான் மாவலி </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>வாணராயர் காலத்தில், கோயில் விரிவாக்கப் பட்டுள்ளது. வேங்கைமார்பன் காலத்திலேயே கூட, கருவறை திருச்சுற்றுகள் இருந்துள்ளன.<br /><br /> காளீஸ்வரர் முதல் பிராகாரத்தில் வலம் வருகிறோம். முதலில் சூரியன். இங்கு வல்லப விநாயகர் எழுந்தருளியுள்ளார். பத்துத் திருக் கரங்களோடு காட்சி தருகிற இவருக்குச் சூரியப் பிள்ளையார் என்றும் திருநாமம். தென்மேற்கு மூலையான கன்னி மூலையில், விநாயகர். அருகில் நாகர்; மீண்டும் விநாயகர். அடுத்து விஸ்வ லிங்கம். வடமேற்கு மூலையில் ஸ்ரீசுப்பிரமணியர். கோஷ்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். மூலவர் சந்நிதியைச் சுற்றிலும், பண்டைய காலக் கோயில் களுக்கே உரித்தான சிறிய அகழி அமைப்பு. 2-ஆம் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர்; பின்னர் அறுபத்துமூவர். </p> <p>தென்மேற்கு மூலையில் காளீஸ்வரர் கல் திருவடிவம். பின்னர் பஞ்ச லிங்கமும் சப்த மாதரும் காட்சி கொடுக்க, வடமேற்கில் சுப்பிரமணியர். வடமேற்கு மூலையில் வருண லிங்கம். வடக்குச் சுற்றில் நடராஜ சபை. வடகிழக்குப் பகுதியில் வெள்ளி வாகனங்கள்; குறிப்பாக, வெள்ளி ரிஷபங்கள். ராமநாதபுர மன்னராக விளங்கிய கிழவன் சேதுபதியார் செய்து கொடுத்த மிகப் பெரிய வெள்ளி ரிஷபமும் உள்ளது. காளீஸ்வரர் கோபுரத்துக்கும் பிராகாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மிக மிக முக்கியமானது. </p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="style3"><font color="#006666">-(இன்னும் வரும்)<br /> படங்கள் எஸ். சாய்தர்மராஜ்</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>
<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr><td align="right" class="Brown_color" height="25" valign="middle">ஈசனின் திருத்தலங்கள்</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color" width="100%"><tbody><tr><td align="left" class="brown_color_bodytext" height="30" valign="top"><strong>காளையார்கோவில் தேவாரத் திருவிலா! </strong></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="right" class="brown_color_bodytext"><strong>டாக்டர் சுதா சேஷய்யன்</strong></p> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><strong>மு</strong>த்திரை மோதிரத்தையும் செங்கோலையும் குப்பமுத்து ஆசாரி வேண்டியபடி அவரிடமே ஒப்படைத்த பெரிய மருது, தேரை நகர்த்தும்படி இறைவனை மனதார வேண்டினார். அருகிலிருந்த சின்ன மருதுவும் அப்படியே வேண்ட.... </p> <p>அதுவரை அங்குலம் நகராத தேர், வெண்ணெயாக வழுக்கிக் கொண்டு ஓடியது. மக்களும் அரசரும் ஆன்மிகமும் ஒன்றாகக் கலந்த இந்தச் சம்பவத்தைப் பற்றிய பாடலும் உண்டு. </p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">மருது வந்தாலும் தேரோடாது -- அவன்<br /> மச்சினன் வந்தாலும் ஓடாது<br /> தேருக்குடையவன் குப்பமுத்து ஆசாரி<br /> தேர்வடம் தொட்டாலே தேரோடும்</td> </tr></tbody></table> <p>இதற்கு இன்னும் கூட சில நெகிழ்ச்சியான மாறுபாடுகள் உள்ளன. தேர் நகர மறுத்தபோது, குப்பமுத்து ஆசாரியை அழைத்து வழி கேட்டதாகவும், 'தன்னை ஒரு நாள் அரசராக்கினால் தேர் ஓடும்' என்று அவர் தெரிவித்ததாகவும் தகவல் உண்டு. 'தேர் ஓட வேண்டுமானால் அரசாட்சி முக்கியமில்லை!' என்று எண்ணிய மருது உடனே அவரை அரசராக்கினார். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>தேர் ஓட ஓடத் தேர்த்தட்டில் அமர்ந்து வந்தார் குப்பமுத்து. பின்னால் நடந்தனர் மருதிருவர். மேடு பள்ளங்களில் ஆடி ஆடி வந்த தேர், சரிவு ஒன்றில் நிலைதடுமாறியது! மக்கள், கஷ்டப்பட்டுத் தேரைக் கட்டுப்படுத்த, ஆட்டத்தில் கீழே விழுந்து விட்ட குப்பமுத்து மீது தேர்ச் சக்கரம் ஓடியிருந்தது. </p> <p>பெரிய மருது பதறி வந்து பார்க்க, அவரைப் பார்த்த படியே குப்பமுத்து நிரந்தரமாகக் கண்மூடினார்; குப்பமுத்துவின் தகாத ஆசைக்குக் கிடைத்த தண்டனை என்று சிலர் முணுமுணுத்தனர்; மரணப் பிடிக்குள்ளிருந்து நீண்ட குப்பமுத்துவின் கையில் ஓர் ஓலை! </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>எடுத்துப் பிரித்தால், 'தேரோடும் நாளில், நாட்டு அரசர் பலியாவார்!' என்ற நாடிச் செய்தி. குப்பமுத்துவின் தியாகமா, மருதுவின் பணிவா, இவர்கள் எல்லோரின் இறை பக்தியா... எது பெரியது என்பது புரியாமலே, காளையார்கோவில் பெரிய கோபுரத்தின் உள்ளே நுழைகிறோம். </p> <p>காளையார் கோயிலில், மூன்று மூலவர் சந்நிதிகள். மூன்றுமே கிழக்கு நோக்கியவை. பழைமையான காளீஸ்வரர் சந்நிதி நடுநாயகமாக விளங்க, அதற்குத் தெற்காக இருப்பது சோமேஸ்வரர் சந்நிதி; காளீஸ்வரருக்கு வடக் காக சுந்தரேஸ்வரர். அதாவது, கோயிலைப் பார்த்தபடி நாம் நின்றால், நமக்கு இடது புறமாக சோமேஸ்வரர், வலது புறமாக சுந்தரேஸ்வரர். </p> <p>சோமேஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பதுதான் மருது பாண்டியர் கட்டிய பெரிய கோபுரம். காளீஸ்வரர் சந்நிதிக்கு நேராக இருப்பது சிறிய கோபுரம். பெரிய கோபுரமே இப்போது பிரதான வாயில். </p> <p>அண்ணாந்து பார்க்கும்போது, பெரிய கோபுரத்தின் அபரிமிதமான அழகு புலப்படுகிறது. ஒன்பது நிலைகள். அதனாலேயே, இதற்கு நவசக்தி கோபுரம் என்றும் பெயர். 155.5 அடி உயரத்தில் கண்ணைப் பறிக்கும் நேர்த்தி. கோபுரம் கட்டுவதற்குச் செங்கற்கள் கொண்டு வந்த கதையை முன்னரே கண்டோம். </p> <p>மானாமதுரையிலிருந்து காளையார்கோவில் வரை வரிசையாக ஆட்கள் நிற்க, ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாற்றி மாற்றியே செங்கற்கள் கொண்டு வரப்பட்டனவாம். கருங்கற்கள், கருமலையிலிருந்தும் திருமலையிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>1781-ல் தொடங்கப்பட்ட கோபுரப் பணி 1800-ல் நிறைவடைந்தது. கோபுரத்தின்மீது ஏறிப் பார்த்தால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குக் கோபுரமும், குன்றக்குடி முருகன் ஆலயமும் தெரிகின்றன. </p> <p>கோபுரம் கட்டப்பட்டதைப் பற்றியும் அதற்கான முயற்சிகள் பற்றியும், செவிவழிச் செய்திகள் பலவும் நிலவுகின்றன. இவற்றில் சுவாரஸ்யமான கதையன்று கோபுரம் கட்டத் தொடங்கிப் பணிகள் தொடர்ந்த நிலையில், அதே இடத்தில் நீரூற்று ஒன்று கிளம்பியதாம். என்னென்னவோ செய்து பார்த்தும் ஊற்றுக்கண்ணை மூட முடியவில்லை. அண்ணன் வெள்ளை மருதுவின் (பெரிய மருதுதான்) வெள்ளை உள்ளம் தெரிந்த சின்ன மருது, 'ஊற்றுக் கண்ணை அடைக்க வழி சொல்பவர்க்குத் தக்க சன்மானம் தரப்படும்' என்று அறிவித்தார். </p> <p>இளைஞன் ஒருவன் வந்து நின்றான். பார்த்தால் பரம பக்கிரி. சிற்ப வல்லுநர்களுக்கு அவனைக் காணும்போதே ஏளனம். 'எங்களுக்கே தெரியவில்லை; இவனுக்கென்ன தெரியப் போகிறது?' என்ற எண்ணம் அவர்களுக்கு. சுலைமான் என்ற அந்த </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>இஸ்லாமிய இளைஞன், தனது முன்னோர் கட்டடக் கலை வல்லுநர்கள் என்பதால், அவர்களின் திறனால் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதாகக் கூறினான். அவனைக் கனிவோடு அணைத்துக் கொண்ட வெள்ளை மருது, 'கோபுரம் கட்ட வேண்டும், அதற்காக எதுவும் செய்ய ஆயத்தம்' என்று பணிந்து கேட்க, சுலைமான் வழி சொன்னான். </p> <p>ஆயிரம் குடங்களில் மணலும் ஆயிரம் குடங்களில் அயிரை மீனும் கொண்டு வரச் சொன்னானாம். ஊற்றுக்கண்ணில், முதலில் நூறு குடம் மணல், பின்னர் நூறு குடம் மீன் என்று மாற்றி மாற்றிக் கொட்டினானாம். மணலை மீறிப் பொங்கிய ஊற்று நீரை, அந்த இடை வெளிகளுக்குள் பாய்ந்த அயிரை மீன்கள் அடைத்துக் கொள்ள, மூக்கின்மீது விரல் வைத்து மக்கள் வியந்தனர். தனக்குச் சன்மானம் ஏதும் வேண்டாம், மருது சகோதரர்களின் அன்பு மட்டும் போதும் என்று குறிப்பிட்ட சுலைமான், வெள்ளையர்களை எதிர்த்த போரில், தாய்மண்ணுக்காகப் போரிட்டு வீர மரணம் அடைந்தான். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>காணக் காணப் பரவசப்படுத்தும் பெரிய கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். நேராக இருப்பது, அருள்மிகு சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் பிராகாரத்தையும் கருவறையையும் மருது பாண்டியர்களே சீர்படுத்திப் பெரிதாகக் கட்டினார்கள். இந்தச் சந்நிதிக்கு வடக்காகவும் கோயிலின் நடுநாயகமாகவும் இருப்பது காளீஸ் வரர் சந்நிதி. ஆதி கோயிலான இங்கிருந்தே நம்முடைய தரிசனத் தைத் தொடங்கலாமா?</p> <p>காளீஸ்வரரே, தேவாரப் பாடல் பெற்றவர். இந்தச் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம், ஐந்து நிலைகளைக் கொண்டது. பேச்சு வழக்கில் சிறிய கோபுரம் என்று அழைக்கப்பட்டாலும், ஐந்து நிலைகளுடன் 'பஞ்சபூத கோபுரம்' என்னும் பெயர் கொண்டது. சுமார் 84 அடி உயரம் கொண்ட இதனை 7-ஆம் நூற்றாண்டில் மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னர் கட்டினார். </p> <p>எந்தக் கோபுரம் வழியாக நுழைந்தாலும், நாம்</p> <p>3-ஆம் பிராகாரத்தை (வெளிப் பிராகாரம்) அடைகிறோம். நேரே காளீஸ்வரர் மூலவரை தரிசிக்கச் செல்வோம், வாருங்கள். 3-ஆம் பிராகாரத்திலிருந்து 2-ஆம் பிராகாரத்தையும் முதல் பிராகாரத்தையும் தாண்டி, மூலவர் சந்நிதி வாயிலில் உள்ள துவாரபாலகர்களை வணங்கி, கருவறை அர்த்த மண்டபத்தை அடைகிறோம் கல்வெட்டுகளில், </p> <p>'கானப்பேர் நாயனார்', 'திருக் கானப்பேருடைய காளையர் நாயனார்' முதலான பெயர்களால் வழங்கப்படுகிற காளீஸ்வரரே, இந்தத் தலத்தின் ஆதி தெய்வம்.</p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்<br /> தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய<br /> தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்<br /> நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே </td> </tr></tbody></table> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>என்று திருஞானசமபந்தப் பெருமான் பாடித் துதிக்கிற காளீஸ்வரர்... சொர்ண காளீஸ்வரர், தட்சிண காளீஸ்வரர், மகாகாளர் என்றும் வணங்கப்படுகிறார். காளி வணங்கியதால் இவர் காளீஸ்வரர். காளி வணங்கியது எப்போது? அதுவொரு பெரிய வரலாறு!</p> <p>கயிலாயத்தில் பரமனும் பார்வதியும் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐயனின் திருக்கண்களை அம்மை பொத்தியது தெரியுமல்லவா! அங்கேதான் கதை தொடங்குகிறது. ஐயன் விழிகளைப் பொத்திய தால், உலகம் இருண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனார், அம்மையைக் காளியாகும்படி சாபமிட்டார். </p> <p>கரிய உருவமும், கோரைப் பற்களும், கொடூர முகமும் கொண்டு காளியாக மாறிய அம்மை, வனங்களில் வலம் வந்தார். அதே நேரம், சண்டாசுரன் எனும் அரக்கனால் துன்பப்பட்ட மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும், அவனிடமிருந்து காக்கும்படி, காளியை வழிபட்டனர். உடனே தமது பரிவார தேவதைகளான யக்ஷினிகளோடு சண்டாசுரனைப் போருக்கு அழைத்தார் அன்னை. அவனோடு சண்டையிடுவதற்காகக் கோட்டை அமைக்கப்பட்டது. </p> <p>மாயாஜால முறையில் வல்லவனான சண்டாசுரன், தன் வடிவை மறைத்துக் கொண்டு மேகமாக மாறினான். அவன் எங்கே என்பதை அறியாத காளி, தம் கண்ணில் அவன் தெரியவேண்டும் என்பதற்காகக் கடுந்தவம் மேற்கொண்டார். அம்மையின் தவத்தைக் கலைக்க அவர் மீது அம்பு மழை பொழிந்தான் அரக்கன். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>அம்மையின் கடுமையான தவத்துக்காக உடனே தோன்றிய திருமால், தமது கருட வாகனத்தையும் சக்கரப் படையையும் கொடுத்தார்; சண்டாசுரன் மேகமாக நிற்பதையும் காட்டித் தந்தார். கருடன் மீதேறிய காளி, விந்திய மலைக்குச் செல்ல... கருடனின் வாசம் பட்டு அங்கு ஓர் அமுத கலசத் தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நாகம் விலகி யது. அமுத கலசத்தைப் பெற்ற காளி மீண்டும் தனது கோட்டையை அடைந்தார். பரிவார தேவதைகளைச் சுற்றி நிற்கச் சொல்லி விட்டு, சண்டாசுரன் மீது அம்பெய்ய... அவன் வீழ்கிற அதே நேரத்தில் அமுத கலசம் உடைக்கப்பட்டது. அரக்கனது கொடுமையின் விளைவுகளிலிருந்து எல்லோரையும் அமுத கலசம் காப்பாற்றியது. <br /><br /> கோட்டை அமைக்கப்பட்ட இடம்- தேவி கோட் டையாகி, பின்னர் (இப்போதும்) தேவகோட்டை ஆனது. அம்மை தவம் செய்த இடம்- உருவாட்டி. சண்டாசுரன் மாய உரு நீங்கி மாண்டு விழுந்த இடம்- மானகண்டான். காளிதேவி வெற்றி பெற்ற இடம்- வெற்றியூர். இதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று நடக்கவில்லை. கயிலாய விளையாட்டுக்காக ஐயனிடம் சாபம் பெற்ற அம்மையின் கோர உருவம் நீங்கவில்லை. அம்மைக்குச் சாபம் கொடுப்பதன் மூலமாக, சண்டாசுரனுடைய கொடுமையை ஒழிப்பதற்கும் வழிவகுத்த சிவபெருமான், மெள்ளச் சிரித்தார். புரிந்து கொண்ட காளிதேவி, தமது வாளைக் குறுக்காக நிறுத்தி அதன் மீது நடந்தார். வாளின் நுனி நின்ற இடம், ருத்திர தீர்த்தக் கரை. அங்கேயே காளிதேவி தவம் செய்து, சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>காளி வழிபட்டதால் காளீஸ்வரர் ஆன பரம் பொருள், அம்மையின் அப்போதைய கருவுருவம் மாறி, தங்க நிறம் படைத்தவராகப் பிரகாசிக்க அருளினார். அவ்வாறு மாறிய அன்னையை அருள்மணமும் புரிந்தார். இதனால், அம்மைக்கு சொர்ணவல்லி (சொர்ணம்- சுவர்ணம் - தங்கம்), தங்க நாச்சியார் ஆகிய திருப்பெயர்கள் ஏற்பட்டன. சுவாமியே சொர்ணகாளீஸ்வரர் என்று வழங்கப்படுகிறார். </p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="80%"><tbody><tr> <td class="block_color_bodytext">தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்<br /> தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு<br /> உண்டதனுக்(கு) இறவா(து) என்றும் இருந்தவனை<br /> ஊழி படைத்தவனோ(டு) ஒள்ளரியும் உணரா<br /> அண்டனை அண்டர்தமக்கு ஆகம நூல்மொழியும்<br /> ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம்<br /> கண்டனை அன்பொடுசென்று எய்துவது என்றுகொலோ</td> </tr></tbody></table> <p>கார்வயல் சூழ்கானப்பேருறை காளையையே என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிப் பரவுகிற ஆதியை, ஐயனை, அருள்மிகு காளீஸ்வரப் பெருமானை வணங்கி நிற்கிறோம். வட்டமான ஆவுடையாருட னும், குட்டையான பாணத்தோடும் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார்; இவர் சுயம்பு. </p> <p>காளீஸ்வரரை வணங்கி விட்டு, பிராகாரத்தை வலம் வருகிறோம். காளீஸ்வரர் கருவறைக்கும் முதல் பிராகாரத்துக்கும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் குலசேகர தேவன் முதலான பாண்டிய மன்னர்கள் ஏராள மான திருப்பணிகள் செய்துள்ளனர். வாணஅரசரான சுந்தரத் தோளுடையான் மாவலி </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="center"></p> <p>வாணராயர் காலத்தில், கோயில் விரிவாக்கப் பட்டுள்ளது. வேங்கைமார்பன் காலத்திலேயே கூட, கருவறை திருச்சுற்றுகள் இருந்துள்ளன.<br /><br /> காளீஸ்வரர் முதல் பிராகாரத்தில் வலம் வருகிறோம். முதலில் சூரியன். இங்கு வல்லப விநாயகர் எழுந்தருளியுள்ளார். பத்துத் திருக் கரங்களோடு காட்சி தருகிற இவருக்குச் சூரியப் பிள்ளையார் என்றும் திருநாமம். தென்மேற்கு மூலையான கன்னி மூலையில், விநாயகர். அருகில் நாகர்; மீண்டும் விநாயகர். அடுத்து விஸ்வ லிங்கம். வடமேற்கு மூலையில் ஸ்ரீசுப்பிரமணியர். கோஷ்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். மூலவர் சந்நிதியைச் சுற்றிலும், பண்டைய காலக் கோயில் களுக்கே உரித்தான சிறிய அகழி அமைப்பு. 2-ஆம் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர்; பின்னர் அறுபத்துமூவர். </p> <p>தென்மேற்கு மூலையில் காளீஸ்வரர் கல் திருவடிவம். பின்னர் பஞ்ச லிங்கமும் சப்த மாதரும் காட்சி கொடுக்க, வடமேற்கில் சுப்பிரமணியர். வடமேற்கு மூலையில் வருண லிங்கம். வடக்குச் சுற்றில் நடராஜ சபை. வடகிழக்குப் பகுதியில் வெள்ளி வாகனங்கள்; குறிப்பாக, வெள்ளி ரிஷபங்கள். ராமநாதபுர மன்னராக விளங்கிய கிழவன் சேதுபதியார் செய்து கொடுத்த மிகப் பெரிய வெள்ளி ரிஷபமும் உள்ளது. காளீஸ்வரர் கோபுரத்துக்கும் பிராகாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மிக மிக முக்கியமானது. </p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="style3"><font color="#006666">-(இன்னும் வரும்)<br /> படங்கள் எஸ். சாய்தர்மராஜ்</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>