<div class="article_container"> <b><br /></b><table><tbody><tr> <td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr> <td align="right" class="Brown_color" height="25" valign="middle">மீண்டும் உங்களுக்காக...</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color" width="100%"><tbody><tr> <td align="left" class="blue_color" height="30" valign="top">அர்த்தமுள்ள இந்து மதம்!</td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="right"></p> <p align="center" class="style5"><u>காலத்தால் அழியாத அன்மிக காவியம்</u></p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4">எ</span>னக்கொரு நண்பர் உண்டு. அவர் வீட்டுக்கு நான் எப்போதாவது சாப்பிடப் போவேன். </p> <p>முதலில், பெரிய தஞ்சாவூர் தாட்டிலை போடுவார்கள். ''இலை இவ்வளவு பெரிதாக இருக்கிறதே. எங்கே வாங்கினீர்கள்?'' என்று கேட்பேன்.</p> <p>''வாங்குவதா? நம் தோட்டத்தில் இருந்து வந்தது!'' என்பார்.</p> <p>பிறகு சாதம் வைப்பார்கள்.</p> <p>''அரிசி நன்றாக இருக்கிறதே?'' என்பேன்.</p> <p>''நம் பண்ணையில் விளைந்தது!'' என்பார்.</p> <p>நெய் ஊற்றுவார்கள். ''நெய் வாசம் கமகமவென்று அடிக் கிறதே!'' என்பேன்.</p> <p>''நம்மிடம் நாற்பது சுவிட்ஸர்லாந்து மாடுகள் உண்டு'' என்பார். 'என் பண்ணை, என் மாடு' என்று பேசுவதில் அவருக்கு அலாதிப் பிரியம்.</p> <p>அவரது தொழிலையே செய்யும் இன்னொரு நண்பரும் உண்டு. அவரது வீட்டுக்குச் சாப்பிடப் போவேன். பாவம் அவர்; மிகவும் நல்லவர். அந்த நண்பரைப் போல் ஐந்து மடங்கு சம்பாதிப்பவர். பிள்ளை குட்டி இல்லாதவர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து சேர்க்காதவர்.</p> <table align="left" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>காய்கறி வாங்கிய கடையையும், அரிசி வாங்கிய கடையையும் கூறுவார். அவரிடம் பண்ணை இல்லை. பணம் நிறைய சம்பாதிப்பாரே தவிர, சொத்து சேர்க்கும் ஆசையில்லை.</p> <p>இந்த மண்ணாசையைப் பற்றி, ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் ஒரு கதை எழுதினார்.</p> <p>ஓர் அரசன். அவனுக்கு வேடிக்கையான ஒரு எண்ணம் தோன்றிற்று. ஒரு வளமான பெரிய நிலத்தைக் காட்டி, 'இந்த நிலத்தில் ஒருவன் எவ்வளவு தூரம் ஓடிச் சுற்றி வருகிறானோ, அவ னுக்கு அந்த இடம் முழுவதும் சொந்தம்!' என்று அறிவித்தான். </p> <p>நில ஆசை பிடித்த ஒருவன் ஓடத் தொடங்கினான். ஓட ஓட, 'இன்னும் கொஞ்சம் போகலாம்! இன்னும் கொஞ்சம் போகலாம்!' என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஓடினான், ஓடினான், ஓடினான். ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் மாரடைப்பால் செத்தான். டால்ஸ்டாய் கதையை முடிக்கும்போது- ''இனி அவனுக்கு அதிக நிலம் தேவை இல்லை; ஆறடி நிலமே போதும்!'' என்று முடித்தார்.</p> <p>அனுபவிக்கும் ஆசை யாரை விட்டது?</p> <p>'வாழ்க்கை என்றால் என்ன?' என்று கேட்டதற்கு, ஆங்கில ஆசிரியன் ஒருவன் சொன்னான் ''ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று, இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் சாவதற்குப் பெயரே வாழ்க்கை.'' </p> <p>சந்நியாசியின் கோவணத்தில் ஒட்டிய அழுக்காவது அவன் கூடவே போய்த்தான் தீருகிறது.</p> <p>கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.</p> <p>'படித்த முட்டாள்' என்று ஒரு கதை எழுதுவதற்காக, அவர் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் இது</p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4"></span>ஏழைத் தோட்டக்காரன் ஒருவன். பாசம் என்ற போகத்தில் மாட்டிக் கொண்டான். அவனுக்கு ஒரு மகன். அவனைப் பட்டணத்தில் படிக்க வைத்துப் பணம் அனுப்பி வந்தான் தோட்டக்காரன். </p> <p>பையன், பட்டணத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான். </p> <p>ஒரு நாள், மகனைப் பார்க்க பட்டணத் துக்கு வந்தான் தந்தை. அன்று, அந்தப் பணக்காரப் பெண்ணுக்குப் பிறந்த நாள். பையன் விருந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவனோ, 'தான் பணக்காரன் மகன்' என்று சொல்லிக் கொண்டிருந்தான்.</p> <p>திடீரென்று ஏழைத் தகப்பனைக் கண்டதும், தன் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று அவனுக்குப் பயம் வந்து விடுகிறது.</p> <p>தகப்பனோ பாசத்தோடு மகனைப் பார்த்து, 'டேய் ராஜா!' என்று கூப்பிட்டு விடுகிறான்.</p> <p>அந்தப் பணக்காரப் பெண் உடனே ஆத்திரத்தோடு, ''யார் இவன்? உங்களைப் பார்த்து, 'டேய்' என்று கூப்பிடுகிறானே?'' என்றாள்.</p> <p>பையன் அமைதியாக, 'இவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன்!' என்று கூறி விடுகிறான்.மனம் ஒடிந்த தந்தை, கண்ணீரோடு கிராமத்துக்குத் திரும்பி, முதலாளியின் தோட்டத்தில் தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தொடங்குகிறான்.</p> <p>காதலியால் வஞ்சிக்கப்பட்ட மகன், பசி- பட்டினியோடு ஒரு நாள் ஓடிவந்து, ''அப்பா, தண்ணீர்... தண் ணீர்!'' என்று அழுகிறான். தகப்பன் அவனுக்குத் தண்ணீர் தராமல், தென்னை மரத்துக்கே ஊற்றுகிறான்.</p> <p>''அட மகனே! உனக்கு ஊற்றிய பாலுக்குப் பரிசாக நீ என் தலையில் அடித்து விட் டாய். இந்தத் தென்னைக்கு எத்தனையோ நாட்கள் நான் தண்ணீர் விட்டிருக்கிறேன்; இதுவரை என் தலையில் விழுந்ததில்லை!''</p> <p>- இதுதான் அந்த வசனம். அந்தப் படம் எடுக்கப்படவில்லை. அந்த வசனத்தைத்தான் பின்னாளில் நான்,</p> <blockquote> <p><em>''தென்னையைப் பெத்தா இளநீரு<br /></em><em>பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!'' </em></p> </blockquote> <p>என்று பாட்டாக எழுதினேன். போகத்தில் ஆசையுள்ள வன், கண்ணீருக்குத் தப்ப முடியாது. அது பாசமாகட்டும்; காதலாகட்டும்; இல்லை நால் வகை ஆசைகளில் எந்த ஓர் ஆசையாகட்டும். அது, மனிதனை நதியோட்டத்தோடு இழுத்துக் கொண்டே போகும்.</p> <p>இறைவன் உலகத்தை எப்படிப் படைத்தான்? போகத்தையும் எவ்வளவு அழகாக வைத்தான்!</p> <p>குறிப்பிட்ட அளவுக்கு மேல் வயலிலே தண்ணீர் தேங் கினால், பயிர் அழுகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் காற்றடித்தால், அது புயலாகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மழை பொழிந்தால், அது வெள்ளமாகி ஊரை அழித்து விடுகிறது.</p> <p>நிகழ்ச்சிகள், தத்துவங்களில் உள்ள நியாயங் களையே கொண்டிருக்கிறது. ஆனால், நிகழ்ந்த கதையே திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண் டிருக்கிறது.</p> <p>நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. அங்கே போகிகள் கூட்டம் ஒன்று. சிறைச் சாலையிலும் அப்படியே. ஹோட்டல் களிலும் அப்படியே. முறையறிந்து வாழ்வோர் எத்தனை பேர்?</p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4"></span>எல்லாரும் சங்கராச்சார்யார் ஆகி விட முடியாது; எனக்குத் தெரியும். ஆனால், தான் விளையாடுவதற்கு ஒரு நியாயமான வேலியை மட்டும் போட்டுக் கொள்கிறவர்கள் எத்தனை பேர்?</p> <p>வெறும் பிரமையிலும் மயக்கத்திலும் எல்லாருமே உழலுகிறோம். கற்பகோடி காலம் வாழப் போவதாகக் கருதுகிறோம். ஏழு தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்கிறோம். 'உடம்பு படுத்தால் ஒரு துளி சாம்பலுக்கு மரியாதை இல்லை' என்பதை மறந்து விடுகிறோம்.</p> <p>அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் போகிகள்- அந்தச் சந்தோஷத்தை எத்தனை நாள் அனுபவித் தார்கள்? இறைவன், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்தித் தண்டிக்கிறான்.</p> <p>சரித்திரம் சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.</p> <p>உலகை வெல்லப் புறப்பட்ட அலெக்சாண்டரின் எலும்புக்கூடு அதோ கிடக்கிறது. சீசரின் எலும்பு கூடக் கடலில் மிதக்கிறது. பாதி உலகத்தை வென்று விட்ட ஹிட்லரின் எலும்புக் கூட்டை உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. இதிலே மண்ணென்ன, பெண்ணென்ன, பொன்னென்ன?</p> <p>நான்காவது ஆசை, புகழ் எனும் ஆசை என்றேன். இதுவும் ஒரு வகை போகம்.</p> <p>'எந்தக் கல்யாண வீட்டிலும் நாமே கல்யாண மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்' என்று பலருக்கு ஆசை. தன்னைப் பற்றியே பாடச் சொல்லிக் கேட்பது-</p> <p>தன்னைப் பற்றியே எழுதச் சொல்லி ரசிப்பது- </p> <p>'கலையில் வல்லவனும் நான்தான்'-</p> <p>'கவிதையில் வல்ல வனும் நான்தான்'-</p> <p>'பத்திரிகையில் ஆசிரியனும் நான்தான்'-</p> <p>'ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் மாப்பிள்ளையும் நான் தான்' என்று திட்டம் தீட்டுவது. </p> <p>வீடெங்கும் புகைப்படங் களையும், வாழ்த்துப் பாடல்களையும் மாட்டி வைப்பது... மேடையேறினால், 'நான்தான்' என்று பேசுவது... மற்றவர்களுக்குப் புகழ் வருவது போல் தோன்றினால் அதைத் தடுக்கப் பார்ப்பது...</p> <p>- இவையெல்லாம், தகுதி இல்லாமல் புகழை விரும்பும் சிலரது குணங்கள். உண்மையிலே தகுதி இருப்பவன், பூமாலைக்கு ஆசைப்பட மாட்டான்.</p> <p>காஞ்சிப் பெரியவரின் காலில் விழுகிற மாதிரி, எவரும் ஒரு ஜனாதிபதியின் காலில் கூட விழுவதில்லை. காரணம், புகழையோ, இகழையோ கணிக்காத பெரிய ஆத்மா, காஞ்சிப் பெரியவர். போகங்களில் சிக்காத புனிதர் அவர். பக்தி மார்க்கத்துக்கும், ஞான மார்க்கத்துக்கும் பாலம் அவர். </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>பகவத் பாதாளுக்கும், ராமானுஜருக்கும் இணைப்புப் பாலம் அவர்.</p> <p>துறவிக்கு வேந்தன் துரும்பு. </p> <p>துறவி என்பவன் யார்? அவன் போகங்களைத் துறந்தவன். 'மத்தியானம் என்ன சாப்பிடலாம்' என்று காலையிலேயே திட்டம் தீட்டாதவன். கைப்பிடி அவலிலும், அரை ஆழாக்குப் பாலிலும் ஆன்மாவையும் தேகத்தையும் பாதுகாப்பவன்.</p> <p>அவன் பெண்ணைத் தொட நேர்ந்தால், பேப்பரைத் தொடுவது போல் உணர்கிறான். பொன் னைத் தொட நேர்ந்தால், கல்லைத் தொடுவது போல் தொடுகிறான். மண்ணில் நடக்கும்போது, </p> <p>பகவான் விரித்த நடை பாதையில் நடப்பதாகக் கருதுகிறான். என் கடிகாரம் எங்கே? என் பெட்டி எங்கே? என்ற வார்த்தைகளை அவன் உச்சரிப்பதே இல்லை.</p> <p>'ரஜோ' குணத்து போகி, ஆன்மாவை அடியோடு ஒழித்து விட்ட வெறும் தேக சுக லௌகிகவாதி.</p> <p>போகத்தை அறவே மறந்து விட்ட துறவி, கடவுளையே தன் சேவைக்கு அழைக்கும் ஞானி.</p> <p>போகம், முடிவாக ரோகத்தில் கொண்டு சேர்க்கும்.</p> <p>யோகம், ஆரம்பத்தி லேயே கைவரப் பெற் றால், அது போகத்தையும், ரோகத்தையும் தூக்கியெறிந்து விட்டுப் பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்.</p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="style3"><font color="#006666">- (வளரும்)</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>
<div class="article_container"> <b><br /></b><table><tbody><tr> <td valign="top"><div class="article_menu"></div></td> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color" width="609"><tbody><tr> <td align="right" class="Brown_color" height="25" valign="middle">மீண்டும் உங்களுக்காக...</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color" width="100%"><tbody><tr> <td align="left" class="blue_color" height="30" valign="top">அர்த்தமுள்ள இந்து மதம்!</td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p align="right"></p> <p align="center" class="style5"><u>காலத்தால் அழியாத அன்மிக காவியம்</u></p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4">எ</span>னக்கொரு நண்பர் உண்டு. அவர் வீட்டுக்கு நான் எப்போதாவது சாப்பிடப் போவேன். </p> <p>முதலில், பெரிய தஞ்சாவூர் தாட்டிலை போடுவார்கள். ''இலை இவ்வளவு பெரிதாக இருக்கிறதே. எங்கே வாங்கினீர்கள்?'' என்று கேட்பேன்.</p> <p>''வாங்குவதா? நம் தோட்டத்தில் இருந்து வந்தது!'' என்பார்.</p> <p>பிறகு சாதம் வைப்பார்கள்.</p> <p>''அரிசி நன்றாக இருக்கிறதே?'' என்பேன்.</p> <p>''நம் பண்ணையில் விளைந்தது!'' என்பார்.</p> <p>நெய் ஊற்றுவார்கள். ''நெய் வாசம் கமகமவென்று அடிக் கிறதே!'' என்பேன்.</p> <p>''நம்மிடம் நாற்பது சுவிட்ஸர்லாந்து மாடுகள் உண்டு'' என்பார். 'என் பண்ணை, என் மாடு' என்று பேசுவதில் அவருக்கு அலாதிப் பிரியம்.</p> <p>அவரது தொழிலையே செய்யும் இன்னொரு நண்பரும் உண்டு. அவரது வீட்டுக்குச் சாப்பிடப் போவேன். பாவம் அவர்; மிகவும் நல்லவர். அந்த நண்பரைப் போல் ஐந்து மடங்கு சம்பாதிப்பவர். பிள்ளை குட்டி இல்லாதவர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து சேர்க்காதவர்.</p> <table align="left" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>காய்கறி வாங்கிய கடையையும், அரிசி வாங்கிய கடையையும் கூறுவார். அவரிடம் பண்ணை இல்லை. பணம் நிறைய சம்பாதிப்பாரே தவிர, சொத்து சேர்க்கும் ஆசையில்லை.</p> <p>இந்த மண்ணாசையைப் பற்றி, ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் ஒரு கதை எழுதினார்.</p> <p>ஓர் அரசன். அவனுக்கு வேடிக்கையான ஒரு எண்ணம் தோன்றிற்று. ஒரு வளமான பெரிய நிலத்தைக் காட்டி, 'இந்த நிலத்தில் ஒருவன் எவ்வளவு தூரம் ஓடிச் சுற்றி வருகிறானோ, அவ னுக்கு அந்த இடம் முழுவதும் சொந்தம்!' என்று அறிவித்தான். </p> <p>நில ஆசை பிடித்த ஒருவன் ஓடத் தொடங்கினான். ஓட ஓட, 'இன்னும் கொஞ்சம் போகலாம்! இன்னும் கொஞ்சம் போகலாம்!' என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஓடினான், ஓடினான், ஓடினான். ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் மாரடைப்பால் செத்தான். டால்ஸ்டாய் கதையை முடிக்கும்போது- ''இனி அவனுக்கு அதிக நிலம் தேவை இல்லை; ஆறடி நிலமே போதும்!'' என்று முடித்தார்.</p> <p>அனுபவிக்கும் ஆசை யாரை விட்டது?</p> <p>'வாழ்க்கை என்றால் என்ன?' என்று கேட்டதற்கு, ஆங்கில ஆசிரியன் ஒருவன் சொன்னான் ''ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று, இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் சாவதற்குப் பெயரே வாழ்க்கை.'' </p> <p>சந்நியாசியின் கோவணத்தில் ஒட்டிய அழுக்காவது அவன் கூடவே போய்த்தான் தீருகிறது.</p> <p>கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.</p> <p>'படித்த முட்டாள்' என்று ஒரு கதை எழுதுவதற்காக, அவர் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் இது</p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4"></span>ஏழைத் தோட்டக்காரன் ஒருவன். பாசம் என்ற போகத்தில் மாட்டிக் கொண்டான். அவனுக்கு ஒரு மகன். அவனைப் பட்டணத்தில் படிக்க வைத்துப் பணம் அனுப்பி வந்தான் தோட்டக்காரன். </p> <p>பையன், பட்டணத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான். </p> <p>ஒரு நாள், மகனைப் பார்க்க பட்டணத் துக்கு வந்தான் தந்தை. அன்று, அந்தப் பணக்காரப் பெண்ணுக்குப் பிறந்த நாள். பையன் விருந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவனோ, 'தான் பணக்காரன் மகன்' என்று சொல்லிக் கொண்டிருந்தான்.</p> <p>திடீரென்று ஏழைத் தகப்பனைக் கண்டதும், தன் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று அவனுக்குப் பயம் வந்து விடுகிறது.</p> <p>தகப்பனோ பாசத்தோடு மகனைப் பார்த்து, 'டேய் ராஜா!' என்று கூப்பிட்டு விடுகிறான்.</p> <p>அந்தப் பணக்காரப் பெண் உடனே ஆத்திரத்தோடு, ''யார் இவன்? உங்களைப் பார்த்து, 'டேய்' என்று கூப்பிடுகிறானே?'' என்றாள்.</p> <p>பையன் அமைதியாக, 'இவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன்!' என்று கூறி விடுகிறான்.மனம் ஒடிந்த தந்தை, கண்ணீரோடு கிராமத்துக்குத் திரும்பி, முதலாளியின் தோட்டத்தில் தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தொடங்குகிறான்.</p> <p>காதலியால் வஞ்சிக்கப்பட்ட மகன், பசி- பட்டினியோடு ஒரு நாள் ஓடிவந்து, ''அப்பா, தண்ணீர்... தண் ணீர்!'' என்று அழுகிறான். தகப்பன் அவனுக்குத் தண்ணீர் தராமல், தென்னை மரத்துக்கே ஊற்றுகிறான்.</p> <p>''அட மகனே! உனக்கு ஊற்றிய பாலுக்குப் பரிசாக நீ என் தலையில் அடித்து விட் டாய். இந்தத் தென்னைக்கு எத்தனையோ நாட்கள் நான் தண்ணீர் விட்டிருக்கிறேன்; இதுவரை என் தலையில் விழுந்ததில்லை!''</p> <p>- இதுதான் அந்த வசனம். அந்தப் படம் எடுக்கப்படவில்லை. அந்த வசனத்தைத்தான் பின்னாளில் நான்,</p> <blockquote> <p><em>''தென்னையைப் பெத்தா இளநீரு<br /></em><em>பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!'' </em></p> </blockquote> <p>என்று பாட்டாக எழுதினேன். போகத்தில் ஆசையுள்ள வன், கண்ணீருக்குத் தப்ப முடியாது. அது பாசமாகட்டும்; காதலாகட்டும்; இல்லை நால் வகை ஆசைகளில் எந்த ஓர் ஆசையாகட்டும். அது, மனிதனை நதியோட்டத்தோடு இழுத்துக் கொண்டே போகும்.</p> <p>இறைவன் உலகத்தை எப்படிப் படைத்தான்? போகத்தையும் எவ்வளவு அழகாக வைத்தான்!</p> <p>குறிப்பிட்ட அளவுக்கு மேல் வயலிலே தண்ணீர் தேங் கினால், பயிர் அழுகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் காற்றடித்தால், அது புயலாகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மழை பொழிந்தால், அது வெள்ளமாகி ஊரை அழித்து விடுகிறது.</p> <p>நிகழ்ச்சிகள், தத்துவங்களில் உள்ள நியாயங் களையே கொண்டிருக்கிறது. ஆனால், நிகழ்ந்த கதையே திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண் டிருக்கிறது.</p> <p>நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. அங்கே போகிகள் கூட்டம் ஒன்று. சிறைச் சாலையிலும் அப்படியே. ஹோட்டல் களிலும் அப்படியே. முறையறிந்து வாழ்வோர் எத்தனை பேர்?</p> <p><span class="style4"></span></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p><span class="style4"></span>எல்லாரும் சங்கராச்சார்யார் ஆகி விட முடியாது; எனக்குத் தெரியும். ஆனால், தான் விளையாடுவதற்கு ஒரு நியாயமான வேலியை மட்டும் போட்டுக் கொள்கிறவர்கள் எத்தனை பேர்?</p> <p>வெறும் பிரமையிலும் மயக்கத்திலும் எல்லாருமே உழலுகிறோம். கற்பகோடி காலம் வாழப் போவதாகக் கருதுகிறோம். ஏழு தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்கிறோம். 'உடம்பு படுத்தால் ஒரு துளி சாம்பலுக்கு மரியாதை இல்லை' என்பதை மறந்து விடுகிறோம்.</p> <p>அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் போகிகள்- அந்தச் சந்தோஷத்தை எத்தனை நாள் அனுபவித் தார்கள்? இறைவன், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்தித் தண்டிக்கிறான்.</p> <p>சரித்திரம் சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.</p> <p>உலகை வெல்லப் புறப்பட்ட அலெக்சாண்டரின் எலும்புக்கூடு அதோ கிடக்கிறது. சீசரின் எலும்பு கூடக் கடலில் மிதக்கிறது. பாதி உலகத்தை வென்று விட்ட ஹிட்லரின் எலும்புக் கூட்டை உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. இதிலே மண்ணென்ன, பெண்ணென்ன, பொன்னென்ன?</p> <p>நான்காவது ஆசை, புகழ் எனும் ஆசை என்றேன். இதுவும் ஒரு வகை போகம்.</p> <p>'எந்தக் கல்யாண வீட்டிலும் நாமே கல்யாண மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்' என்று பலருக்கு ஆசை. தன்னைப் பற்றியே பாடச் சொல்லிக் கேட்பது-</p> <p>தன்னைப் பற்றியே எழுதச் சொல்லி ரசிப்பது- </p> <p>'கலையில் வல்லவனும் நான்தான்'-</p> <p>'கவிதையில் வல்ல வனும் நான்தான்'-</p> <p>'பத்திரிகையில் ஆசிரியனும் நான்தான்'-</p> <p>'ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் மாப்பிள்ளையும் நான் தான்' என்று திட்டம் தீட்டுவது. </p> <p>வீடெங்கும் புகைப்படங் களையும், வாழ்த்துப் பாடல்களையும் மாட்டி வைப்பது... மேடையேறினால், 'நான்தான்' என்று பேசுவது... மற்றவர்களுக்குப் புகழ் வருவது போல் தோன்றினால் அதைத் தடுக்கப் பார்ப்பது...</p> <p>- இவையெல்லாம், தகுதி இல்லாமல் புகழை விரும்பும் சிலரது குணங்கள். உண்மையிலே தகுதி இருப்பவன், பூமாலைக்கு ஆசைப்பட மாட்டான்.</p> <p>காஞ்சிப் பெரியவரின் காலில் விழுகிற மாதிரி, எவரும் ஒரு ஜனாதிபதியின் காலில் கூட விழுவதில்லை. காரணம், புகழையோ, இகழையோ கணிக்காத பெரிய ஆத்மா, காஞ்சிப் பெரியவர். போகங்களில் சிக்காத புனிதர் அவர். பக்தி மார்க்கத்துக்கும், ஞான மார்க்கத்துக்கும் பாலம் அவர். </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext"><p>பகவத் பாதாளுக்கும், ராமானுஜருக்கும் இணைப்புப் பாலம் அவர்.</p> <p>துறவிக்கு வேந்தன் துரும்பு. </p> <p>துறவி என்பவன் யார்? அவன் போகங்களைத் துறந்தவன். 'மத்தியானம் என்ன சாப்பிடலாம்' என்று காலையிலேயே திட்டம் தீட்டாதவன். கைப்பிடி அவலிலும், அரை ஆழாக்குப் பாலிலும் ஆன்மாவையும் தேகத்தையும் பாதுகாப்பவன்.</p> <p>அவன் பெண்ணைத் தொட நேர்ந்தால், பேப்பரைத் தொடுவது போல் உணர்கிறான். பொன் னைத் தொட நேர்ந்தால், கல்லைத் தொடுவது போல் தொடுகிறான். மண்ணில் நடக்கும்போது, </p> <p>பகவான் விரித்த நடை பாதையில் நடப்பதாகக் கருதுகிறான். என் கடிகாரம் எங்கே? என் பெட்டி எங்கே? என்ற வார்த்தைகளை அவன் உச்சரிப்பதே இல்லை.</p> <p>'ரஜோ' குணத்து போகி, ஆன்மாவை அடியோடு ஒழித்து விட்ட வெறும் தேக சுக லௌகிகவாதி.</p> <p>போகத்தை அறவே மறந்து விட்ட துறவி, கடவுளையே தன் சேவைக்கு அழைக்கும் ஞானி.</p> <p>போகம், முடிவாக ரோகத்தில் கொண்டு சேர்க்கும்.</p> <p>யோகம், ஆரம்பத்தி லேயே கைவரப் பெற் றால், அது போகத்தையும், ரோகத்தையும் தூக்கியெறிந்து விட்டுப் பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்.</p> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="2"><span class="style3"><font color="#006666">- (வளரும்)</font></span></td> <td align="center" colspan="3" rowspan="2" width="88"> </td> </tr> <tr> <td colspan="2"> </td> </tr> </tbody></table> <span class="brown_color_bodytext"> </span> </td></tr></tbody></table> </td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"><tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table> </div>