<p><span style="color: #ff0000"><strong>எ</strong></span>ல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறோம்; எதை நோக்கி ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்!</p>.<p>'இந்தச் சாமியாரிடம் போனால், இது நடக்கும், அந்த ஜோசியரிடம் போனால், அது நடக்கும்’ என்று ஒரு கூட்டம்; இந்தத் தலத்துக்குப் போனால், இன்ன நல்லது நடக்கும், அந்தத் தலத்துக்குப் போனால் அந்த நோய் தீரும் என்று ஒரு கூட்டம்...</p>.<p>இப்படிப் பலவிதமான கூட்டங்கள் பலவிதமான நம்பிக்கைகளோடு ஓடிக்கொண்டு இருந்தாலும், வேறுபட்ட விசித்திரமான கூட்டமும் ஒன்று உண்டு. அது...</p>.<p>'சித்த புருஷர்கள் இன்றும் இருக்கிறார்களாமே! அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?’ என்று, காடு- மலையெல்லாம் சுற்றி, அலைந்துதிரிந்து தேடிக்கொண்டிருக்கிறது. 'உலகில் எங்கு பார்த்தாலும் வறுமையும் ஏழ்மையும் தாண்டவமாடுகிறது. சித்த புருஷர்களைப் பார்த்து, அவர்களின் மூலம் ஏராளமான தங்கம் செய்யச் சொல்லி, இந்த உலகத்தை வறுமையற்றதாகச் செய்துவிடலாமே..!’ என்பது அவர்களின் எண்ணம்.</p>.<p>இவர்களின் மனத்தில் உள்ள உண்மையை உணர்ந்த சித்த புருஷர்களோ, இவர்களின் பார்வையிலேயே படாதவாறு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மறைந்து வாழும் சித்தர் கூட்டம் ஒன்றை, ஒருவர் பார்த்துவிட்டார்.</p>.<p>நல்லவர்களின், பற்றற்றவர்களின் பார்வையில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சித்தர் கூட்டம், அவர் பார்வையில் பட்டிருக்கிறது என்றால், அவர் நல்லவர், பற்றற்றவர் என்பது சொல்லாமலேயே விளங்குகிறதல்லவா?</p>.<p>அனைத்தும் அறிந்தவர், ஞான நூல்களில் கரை கண்டவரான அவர், சித்தர் கூட்டத்திடம் எப்படிப் பேச்சைத் துவக்குகிறார் பாருங்கள்!</p>.<p><span style="color: #ff0000"><strong>''ப</strong></span>டிக்காதவர்கள்தான் மிகவும் நல்லவர்கள். எவ்வளவு படித்தும் அறிவில்லாத என் கர்மத்தை (செயலை) என்ன சொல்வேன்? என் அறிவைத்தான் என்ன சொல்வேன்?'' என்றவர் தொடர்ந்து தன் செயல்களைப் பட்டியல் இடுகிறார்.</p>.<p>''அனுபவசாலிகளான ஞானவான்கள் வந்தால், அவர்களிடம் 'ஞானத்தையும் நீதியையும் வைத்துக்கொண்டு வாழ முடியுமா? கர்மம் (செயல்)தான் முக்கியம். உழைக்காமல் உயிர் வாழவே முடியாதே! என்ன பேசுகிறீர்கள்?’ என்பேன். அந்த ஞானிகள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.</p>.<p>கர்மவாதி ஒருவன் வந்து, 'அப்படிச் சொல்லு! கர்மம்தான் முக்கியம்’ என்று பேசினால், அவனையும் மறுப்பேன்.</p>.<p>'ஏனப்பா! உழைப்பு உழைப்பு என்று எவ்வளவு நாட்கள்தான் உழைப்பாய்? அதிலிருந்து விடுபடும் ஞான வழியைத் தேட வேண்டாமா?’ என்று கேட்டு, அந்தக் கர்மவாதியின் வாயையும் அடைப்பேன்.</p>.<p>சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்ற ஒருவன் வந்து என்னிடம் ஏதாவது சொன்னால், 'என்னய்யா இது! இதெல்லாம் ஏற்கெனவே தமிழில் உள்ளதே! இதைப்போய் இப்போது வந்து சொல்கிறீரே!’ என்று ஒரு போடு போடுவேன். வடமொழி வல்லவர் வாய்திறப்பாரா என்ன?</p>.<p>அதேபோல, தமிழ் அறிஞர் யாராவது வந்து என்னிடம் பேசத் தொடங்கினால், 'சம்ஸ்கிருத வியாகரணத்தைக் (இலக்கணத்தை) கரைத்துக் குடித்தவன் நான்.</p>.<p>காளிதாச கவி எழுதிய உத்தர காலாமிர்தம் தெரியுமா? வேதங்களும் உபநிடதங்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன. ராமாயணம், பாரதம், ஸ்காந்தம் என்று எவ்வளவு ஞான நூல்கள்?! பகவத் கீதை ஒன்று போதுமே! சம்ஸ்கிருதத்துக்கு முன்னால நிக்க முடியுமா?’ என்று அடுக்குவேன். தமிழறிஞர் தலைகுனிந்து போவார்.</p>.<p>இப்படியாக அனைவரையும் பயப்படுத்தி விரட்டுவதற்குத்தான் நான் கற்ற கல்வியும் என் வித்தைகளும் பயன்பட்டனவே தவிர, முக்திக்கான வழி தெரியவில்லை. என் படிப்பும் வித்தைகளும் எனக்கு முக்தியைத் தருமா?'' என்று கேட்கிறார், அந்த ஞானவான்.</p>.<p>யார் என்கிறீர்களா? தாயுமானவ ஸ்வாமிகள்தான்! அவர்தான் இவ்வாறு கேட்கிறார் சித்த புருஷர்களிடம்.</p>.<p>காரணம்? வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திர நூல்கள் என அனைத்தும் அறிந்தவர்கள் சித்த புருஷர்கள்; சமரச நிலைபெற்ற நல்லவர்கள்; தங்களை உணர்ந்தவர்கள். முக்தி நிலை அடையும் வழியை அனைவருக்கும் உபதேசிப்பவர்கள். அதனால்தான், அனுபவசாலிகளான அந்த சித்த புருஷர்களிடம் சென்று, தனக்கும் நல்வழி காட்டுமாறு வேண்டுகிறார் தாயுமானவர் - நம் சார்பாக!</p>.<p>நாம் கற்ற கல்வியும் அறிந்த வித்தைகளும். அடுத்தவர்களிடம் குறை கண்டுபிடித்துக் குற்றம் சொல்வதற்குப் பயன்படக்கூடாது; அமைதி, நிம்மதி முதலானவற்றை அடைய முயல வேண்டும்.</p>.<p>அதற்கான வழியை, அனுபவசாலிகளிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்று</p>.<p>தன்னுடைய பாடலின் மூலம் அறிவுறுத்துகிறார்,</p>.<p>தாயுமான ஸ்வாமிகள்.</p>.<p>இதோ அவரது பாடல்...</p>.<p>கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்<br /> கற்றும் அறிவிலாத என்<br /> கர்மத்தை என் சொல்கேன்? மதியை என் சொல்லுகேன்?<br /> கைவல்ய ஞானநீதி<br /> நல்லோர் உரைக்கிலோ கர்ம முக்கியமென்று<br /> நாட்டுவேன் கர்மம் ஒருவன்<br /> நாட்டினாலோ பழைய ஞானம் முக்கியம் என்று<br /> நவிலுவேன் வடமொழியிலே<br /> வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே<br /> வந்ததா விவகரிப்பேன்<br /> வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின்</p>.<p>வசனங்கள் சிறிது புகல்வேன்<br /> வெல்லாமல் எவரையும் மருட்டி விட வகைவந்த<br /> வித்தையென் முத்தி தருமோ?<br /> வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற<br /> வித்தகச் சித்தர் கணமே!</p>.<p>மிக அற்புதமான பாடல்தான் இல்லையா?!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- இன்னும் படிப்போம்...</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>எ</strong></span>ல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறோம்; எதை நோக்கி ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்!</p>.<p>'இந்தச் சாமியாரிடம் போனால், இது நடக்கும், அந்த ஜோசியரிடம் போனால், அது நடக்கும்’ என்று ஒரு கூட்டம்; இந்தத் தலத்துக்குப் போனால், இன்ன நல்லது நடக்கும், அந்தத் தலத்துக்குப் போனால் அந்த நோய் தீரும் என்று ஒரு கூட்டம்...</p>.<p>இப்படிப் பலவிதமான கூட்டங்கள் பலவிதமான நம்பிக்கைகளோடு ஓடிக்கொண்டு இருந்தாலும், வேறுபட்ட விசித்திரமான கூட்டமும் ஒன்று உண்டு. அது...</p>.<p>'சித்த புருஷர்கள் இன்றும் இருக்கிறார்களாமே! அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?’ என்று, காடு- மலையெல்லாம் சுற்றி, அலைந்துதிரிந்து தேடிக்கொண்டிருக்கிறது. 'உலகில் எங்கு பார்த்தாலும் வறுமையும் ஏழ்மையும் தாண்டவமாடுகிறது. சித்த புருஷர்களைப் பார்த்து, அவர்களின் மூலம் ஏராளமான தங்கம் செய்யச் சொல்லி, இந்த உலகத்தை வறுமையற்றதாகச் செய்துவிடலாமே..!’ என்பது அவர்களின் எண்ணம்.</p>.<p>இவர்களின் மனத்தில் உள்ள உண்மையை உணர்ந்த சித்த புருஷர்களோ, இவர்களின் பார்வையிலேயே படாதவாறு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மறைந்து வாழும் சித்தர் கூட்டம் ஒன்றை, ஒருவர் பார்த்துவிட்டார்.</p>.<p>நல்லவர்களின், பற்றற்றவர்களின் பார்வையில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சித்தர் கூட்டம், அவர் பார்வையில் பட்டிருக்கிறது என்றால், அவர் நல்லவர், பற்றற்றவர் என்பது சொல்லாமலேயே விளங்குகிறதல்லவா?</p>.<p>அனைத்தும் அறிந்தவர், ஞான நூல்களில் கரை கண்டவரான அவர், சித்தர் கூட்டத்திடம் எப்படிப் பேச்சைத் துவக்குகிறார் பாருங்கள்!</p>.<p><span style="color: #ff0000"><strong>''ப</strong></span>டிக்காதவர்கள்தான் மிகவும் நல்லவர்கள். எவ்வளவு படித்தும் அறிவில்லாத என் கர்மத்தை (செயலை) என்ன சொல்வேன்? என் அறிவைத்தான் என்ன சொல்வேன்?'' என்றவர் தொடர்ந்து தன் செயல்களைப் பட்டியல் இடுகிறார்.</p>.<p>''அனுபவசாலிகளான ஞானவான்கள் வந்தால், அவர்களிடம் 'ஞானத்தையும் நீதியையும் வைத்துக்கொண்டு வாழ முடியுமா? கர்மம் (செயல்)தான் முக்கியம். உழைக்காமல் உயிர் வாழவே முடியாதே! என்ன பேசுகிறீர்கள்?’ என்பேன். அந்த ஞானிகள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.</p>.<p>கர்மவாதி ஒருவன் வந்து, 'அப்படிச் சொல்லு! கர்மம்தான் முக்கியம்’ என்று பேசினால், அவனையும் மறுப்பேன்.</p>.<p>'ஏனப்பா! உழைப்பு உழைப்பு என்று எவ்வளவு நாட்கள்தான் உழைப்பாய்? அதிலிருந்து விடுபடும் ஞான வழியைத் தேட வேண்டாமா?’ என்று கேட்டு, அந்தக் கர்மவாதியின் வாயையும் அடைப்பேன்.</p>.<p>சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்ற ஒருவன் வந்து என்னிடம் ஏதாவது சொன்னால், 'என்னய்யா இது! இதெல்லாம் ஏற்கெனவே தமிழில் உள்ளதே! இதைப்போய் இப்போது வந்து சொல்கிறீரே!’ என்று ஒரு போடு போடுவேன். வடமொழி வல்லவர் வாய்திறப்பாரா என்ன?</p>.<p>அதேபோல, தமிழ் அறிஞர் யாராவது வந்து என்னிடம் பேசத் தொடங்கினால், 'சம்ஸ்கிருத வியாகரணத்தைக் (இலக்கணத்தை) கரைத்துக் குடித்தவன் நான்.</p>.<p>காளிதாச கவி எழுதிய உத்தர காலாமிர்தம் தெரியுமா? வேதங்களும் உபநிடதங்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன. ராமாயணம், பாரதம், ஸ்காந்தம் என்று எவ்வளவு ஞான நூல்கள்?! பகவத் கீதை ஒன்று போதுமே! சம்ஸ்கிருதத்துக்கு முன்னால நிக்க முடியுமா?’ என்று அடுக்குவேன். தமிழறிஞர் தலைகுனிந்து போவார்.</p>.<p>இப்படியாக அனைவரையும் பயப்படுத்தி விரட்டுவதற்குத்தான் நான் கற்ற கல்வியும் என் வித்தைகளும் பயன்பட்டனவே தவிர, முக்திக்கான வழி தெரியவில்லை. என் படிப்பும் வித்தைகளும் எனக்கு முக்தியைத் தருமா?'' என்று கேட்கிறார், அந்த ஞானவான்.</p>.<p>யார் என்கிறீர்களா? தாயுமானவ ஸ்வாமிகள்தான்! அவர்தான் இவ்வாறு கேட்கிறார் சித்த புருஷர்களிடம்.</p>.<p>காரணம்? வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திர நூல்கள் என அனைத்தும் அறிந்தவர்கள் சித்த புருஷர்கள்; சமரச நிலைபெற்ற நல்லவர்கள்; தங்களை உணர்ந்தவர்கள். முக்தி நிலை அடையும் வழியை அனைவருக்கும் உபதேசிப்பவர்கள். அதனால்தான், அனுபவசாலிகளான அந்த சித்த புருஷர்களிடம் சென்று, தனக்கும் நல்வழி காட்டுமாறு வேண்டுகிறார் தாயுமானவர் - நம் சார்பாக!</p>.<p>நாம் கற்ற கல்வியும் அறிந்த வித்தைகளும். அடுத்தவர்களிடம் குறை கண்டுபிடித்துக் குற்றம் சொல்வதற்குப் பயன்படக்கூடாது; அமைதி, நிம்மதி முதலானவற்றை அடைய முயல வேண்டும்.</p>.<p>அதற்கான வழியை, அனுபவசாலிகளிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்று</p>.<p>தன்னுடைய பாடலின் மூலம் அறிவுறுத்துகிறார்,</p>.<p>தாயுமான ஸ்வாமிகள்.</p>.<p>இதோ அவரது பாடல்...</p>.<p>கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்<br /> கற்றும் அறிவிலாத என்<br /> கர்மத்தை என் சொல்கேன்? மதியை என் சொல்லுகேன்?<br /> கைவல்ய ஞானநீதி<br /> நல்லோர் உரைக்கிலோ கர்ம முக்கியமென்று<br /> நாட்டுவேன் கர்மம் ஒருவன்<br /> நாட்டினாலோ பழைய ஞானம் முக்கியம் என்று<br /> நவிலுவேன் வடமொழியிலே<br /> வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே<br /> வந்ததா விவகரிப்பேன்<br /> வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின்</p>.<p>வசனங்கள் சிறிது புகல்வேன்<br /> வெல்லாமல் எவரையும் மருட்டி விட வகைவந்த<br /> வித்தையென் முத்தி தருமோ?<br /> வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற<br /> வித்தகச் சித்தர் கணமே!</p>.<p>மிக அற்புதமான பாடல்தான் இல்லையா?!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- இன்னும் படிப்போம்...</strong></span></p>