<p><strong>இ</strong>ணையில்லா எழில் கோலத்தில் அருளும் இந்தப் பெருமாள் எந்தத் தலத்தில் அருள்பவர் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?</p><p>வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தலம் இது. நின்றான்- அமர்ந்தான்- கிடந்தான் ஆகிய மூன்று கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம்.</p>.<p>ருக்மிணி பிராட்டி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் சகிதம் குடும்பசமேதராக பெருமாள் அருளோச்சும் அற்புதத் தலம் இது.</p><p>திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோ ரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்தது, இந்த உற்சவர் அருளும் திருக்கோயில்!</p><p>இன்னும் உங்களால் கணிக்கமுடியவில்லையா... எனில் பக்கத்தைப் புரட்டுங்களேன்!</p>.<p><strong>அ</strong>ல்லிக்கேணி அழகனாம் அருள்மிகு பார்த்தசாரதியின் எழில்கோலம் சிலிர்க்க வைக்கிறதா! ஆம் இந்தத் தலத்தில் மூலவர் வேங்கடகிருஷ்ணனாக அருள, உற்சவர் பார்த்தசாரதியாய் அருள்கிறார். தாயாரின் திருநாமம் - ஸ்ரீவேதவல்லித் தாயார்</p>.<p>அழகிய அல்லி மலர்கள் நிரம்பிய குளத்தைக் கொண்டிருந்ததால் இந்தப் பகுதி, முற்காலத்தில் திரு அல்லிக்கேணி எனப்பட்டதாம். புராணங்கள் இந்தத் தலத்தை பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம்) என்கின்றன.</p><p> உற்சவ மூர்த்தியான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளி இருக்கிறார். பார்த்தசாரதியின் முகத்தில் யுத்த பாணங்களால் ஏற்பட்ட வடுக்கள் திகழ்கின்றன. </p><p> பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகள், ஸ்ரீபார்த்தசாரதியைக் காயப்படுத்தியதால் அதன் தகிப்பு இன்னும் அடங்கவில்லையாம். எனவே, நைவேத்தியத்தில் நெய்தான் பிரதானம். எண்ணெய் வகையறாக்களை அதிகம் சேர்ப்பதில்லை. சுள்ளென்ற மிளகாய் கிடையாது. வெறும் மிளகுதான்!</p>.<p>மூன்று கோலங்கள் காணக்கிடைக்கும் தலம் என்று பார்த்தோம் அல்லவா? அதன்படி நின்றகோலத்தில் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் அருள்கிறார். அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதெள்ளியசிங்கரும் கிடந்த கோலத்தில் மன்னாதர் எனச் சிறப்பிக்கப்படும் ஸ்ரீரங்கநாதரும் அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீவரதர் மற்றும் ஸ்ரீசக்கரவர்த்தி திருமகன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.</p><p> பேயாழ்வாரின் சிஷ்யரான திருமழிசையாழ்வார், யோக நிலையில் பல ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். ஆசார்யர்களான ஸ்ரீபாஷ்யக்காரர், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீவேதாந்தாசார்யர் போன்றோரும் சங்கீத மேதைகளான ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் போன்றோரும் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்துள்ளனர். </p>
<p><strong>இ</strong>ணையில்லா எழில் கோலத்தில் அருளும் இந்தப் பெருமாள் எந்தத் தலத்தில் அருள்பவர் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?</p><p>வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தலம் இது. நின்றான்- அமர்ந்தான்- கிடந்தான் ஆகிய மூன்று கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம்.</p>.<p>ருக்மிணி பிராட்டி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் சகிதம் குடும்பசமேதராக பெருமாள் அருளோச்சும் அற்புதத் தலம் இது.</p><p>திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோ ரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்தது, இந்த உற்சவர் அருளும் திருக்கோயில்!</p><p>இன்னும் உங்களால் கணிக்கமுடியவில்லையா... எனில் பக்கத்தைப் புரட்டுங்களேன்!</p>.<p><strong>அ</strong>ல்லிக்கேணி அழகனாம் அருள்மிகு பார்த்தசாரதியின் எழில்கோலம் சிலிர்க்க வைக்கிறதா! ஆம் இந்தத் தலத்தில் மூலவர் வேங்கடகிருஷ்ணனாக அருள, உற்சவர் பார்த்தசாரதியாய் அருள்கிறார். தாயாரின் திருநாமம் - ஸ்ரீவேதவல்லித் தாயார்</p>.<p>அழகிய அல்லி மலர்கள் நிரம்பிய குளத்தைக் கொண்டிருந்ததால் இந்தப் பகுதி, முற்காலத்தில் திரு அல்லிக்கேணி எனப்பட்டதாம். புராணங்கள் இந்தத் தலத்தை பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம்) என்கின்றன.</p><p> உற்சவ மூர்த்தியான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளி இருக்கிறார். பார்த்தசாரதியின் முகத்தில் யுத்த பாணங்களால் ஏற்பட்ட வடுக்கள் திகழ்கின்றன. </p><p> பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகள், ஸ்ரீபார்த்தசாரதியைக் காயப்படுத்தியதால் அதன் தகிப்பு இன்னும் அடங்கவில்லையாம். எனவே, நைவேத்தியத்தில் நெய்தான் பிரதானம். எண்ணெய் வகையறாக்களை அதிகம் சேர்ப்பதில்லை. சுள்ளென்ற மிளகாய் கிடையாது. வெறும் மிளகுதான்!</p>.<p>மூன்று கோலங்கள் காணக்கிடைக்கும் தலம் என்று பார்த்தோம் அல்லவா? அதன்படி நின்றகோலத்தில் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் அருள்கிறார். அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதெள்ளியசிங்கரும் கிடந்த கோலத்தில் மன்னாதர் எனச் சிறப்பிக்கப்படும் ஸ்ரீரங்கநாதரும் அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீவரதர் மற்றும் ஸ்ரீசக்கரவர்த்தி திருமகன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.</p><p> பேயாழ்வாரின் சிஷ்யரான திருமழிசையாழ்வார், யோக நிலையில் பல ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். ஆசார்யர்களான ஸ்ரீபாஷ்யக்காரர், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீவேதாந்தாசார்யர் போன்றோரும் சங்கீத மேதைகளான ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் போன்றோரும் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்துள்ளனர். </p>