றாம் சந்தோஷ், ஓவியம் : மணிவண்ணன்
துரத்தும் நிழல்களிலிருந்து
தன்னைப் பத்திரப்படுத்திக்கொள்ளவே
சரியாக இருக்கிறது சுகறாவுக்கு
சுகறா
அடிக்கடி சுகாறா என்றும் விளக்கப்படுவதுண்டு
சுகாறா என வெறிமையின் குரலில் அவள் விளிக்கப்படும் பொழுது
அவள் உடல்மொத்தம் அதிர்வுற்று உதிர்வது
வழக்கம்
உதிரும் தன் உறுப்புகளைப் பொறுக்கிக்கொண்டு
ரம்யத்திலும் ஒரு துளி கசப்புள்ளதை உணர்ந்தவளாய்
அவள் பெயர்வாள்.