அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய்
வாஜ்பாய் வரலாறு
இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த 1996-ம் ஆண்டில் பொறுப்பேற்ற வாஜ்பாயின் முதல் பதவிக்காலம் 13 நாள்கள் மட்டுமே நீடித்தது. பின்னர், 1998-ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். ஆனால், இந்தமுறை அவர் பதவியேற்று 13 மாதங்களே பிரதமராக நீடிக்க முடிந்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓர் ஓட்டில் தோல்வியடைந்து, பதவி விலகினார். அடுத்து 1999-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்தார். ஆனால், இந்தமுறை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை அலங்கரித்த பெருமை வாஜ்பாயைச் சேரும்.
50 ஆண்டுக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்த்தவர்.
பொக்ரான் அணுகுண்டு சோதனை
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான், இமயம் முதல் குமரிவரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரச் சாலை திட்டம் திட்டமிடப்பட்டு, கொண்டுவரப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். இதுபோன்ற பல சாதனைகளைப் புரிந்தவர். சுதந்திரப் போராட்ட தியாகி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணியாய் விளங்கியவர்.

`கிராமசபை பெயரிலாவது கிராமத்தைப் பார்க்கட்டும்!’ - தி.மு.க-வைச் சாடிய பொன்.ராதாகிருஷ்ணன்

`டெல்லியில் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!’ - ராம்விலாஸ் பஸ்வானின் அரசியல் பாதை #RIP

அணுகுண்டுச் சோதனையால் அதிர்ந்த வீடுகள், குழம்பிய மக்கள்... 1998-ல் பொக்ரானில் நடந்தது என்ன? #VikatanOriginals

இனிமேல் இதுதான் இயல்பு வாழ்க்கை!

`மேஜர்ஜெனரல் பிருத்விராஜான அப்துல் கலாம்; சிஐஏவை ஏமாற்றிய டிஆர்டிஓ!’ #NationalTechnologyDay பின்னணி

மக்கள் தவிக்கும் நேரத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்துவது நியாயமா? மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா?

வாஜ்பாய் - அத்வானி முதல் மோடி - அமித் ஷா வரை... இது பி.ஜே.பி-யின் கதை! #BJPat40

கள்ளத் துப்பாக்கிகளும் கலவர டெல்லியும்!
`25 அடி வெண்கலச் சிலை; பிரமாண்ட விழா!’- உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய் சிலையைத் திறக்கும் மோடி

வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்தது முதல் பெனாசிர் கொலை வரை... முஷாரப்புக்கு ஏன் இந்த நிலை?

முரண்கள்தாண்டி, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் அத்வானி - பிறந்தநாள் பகிர்வு
