Published:Updated:

பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்; மருத்துவமனையில் தெரியவந்த அதிர்ச்சி! - நடந்தது என்ன?

பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்
News
பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்

வியட்நாமில், பச்சை ரத்தத்தால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு உடலில் ஆங்காங்கே தோலுக்கடியில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்; மருத்துவமனையில் தெரியவந்த அதிர்ச்சி! - நடந்தது என்ன?

வியட்நாமில், பச்சை ரத்தத்தால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு உடலில் ஆங்காங்கே தோலுக்கடியில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்
News
பெண்ணின் உடலில் திடீரென நெளிந்த புழுக்கள்

வியட்நாம் நாட்டில், உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவரின் உடலினுள் ஆங்காங்கே புழுக்கள் இருந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக, பச்சை ரத்தத்தைச் சமைக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் உள்ளூர் உணவான 'டைட் கேன்’ (Tiet canh) என்பதை அவரே வீட்டில் தயாரித்துச் சாப்பிட்டிருக்கிறார்.

மருத்துவம்
மருத்துவம்

அதன் பிறகு அவருக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. பிறகு அந்தப் பெண், அருகிலுள்ள Dang Van Ngu மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, அவருடைய உடலில் கை கால்களில் தோலுக்கடியில் புழுக்கள் திரண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மூளையில்கூட புழுக்கள் குழுமியிருந்தன.

இருப்பினும் சரியான நேரத்தில் மருத்துவர்கள் அவருக்குத் தகுந்த சிகிச்சையளித்து அவர் உயிரைக் காப்பாற்றினர். பின்னர் இது குறித்துப் பேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் டிரான் ஹுய் தோ (Tran Huy Tho), ``முதலில் மருத்துவர்கள், அந்தப் பெண்ணுக்கு பக்கவாதத்தால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில், உடலில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது.

பெண் உடலில் புழு - வியட்நாம்
பெண் உடலில் புழு - வியட்நாம்

பச்சை ரத்தத்தால் தயாரிக்கப்பட்ட உணவாலேயே இப்படி நேர்ந்திருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். ஒருவேளை இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் இறந்துகூட போயிருக்கலாம். நல்லவேளை மருத்துவர்கள் தகுந்த சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர்" என்றார்.

பிறகு இது தொடர்பாக உள்ளூர் ஊடகத்தில் பேசிய அந்தப் பெண், ``அந்த உணவை நானே தயாரித்தால் சுத்தமாக இருக்கும் என்று நினைத்து அப்படிச் செய்துவிட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.